ஈஷா விவசாயம் சார்பாக இயற்கை விவசாயத்தின் தொழில்நுட்பமாக கருதப்படும் இயற்கை முறையில் மாடித்தோட்டப் பயிற்சியானது முன்னோடி இயற்கை விவசாயிகள் மூலம் கற்றுத் தரப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் ஒரு குடும்பத்திற்குத் தேவையான காய்கறிகள் மற்றும் கீரைகள் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது.
மேலும் இதில் மண் இல்லாமல் காய்கறிகள் உற்பத்தி செய்யும் முறை, சமையலறை காய்கறிக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் முறை, நாட்டுரகக் காய்கறி விதைகள் மூலம் சாகுபடி செய்யும் முறை போன்ற பயிற்சி வழங்கப்படுகிறது.
அதை தொடர்ந்து இயற்கை இடுபொருட்கள், பு+ச்சி விரட்டிகள் தயாரிக்கும் முறை, விதைகளை சேகரிக்கும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது மற்றும் சிறிய அளவிலான வீட்டுத்தோட்டம் அமைக்கும் முறை போன்ற அனைத்து தொழில்நுட்பம் முறைகளும் கற்றுத் தரப்படுகிறது.
பயிற்சி நடைபெறும் நாள் : 07.04.18 சனிக்கிழமை (காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை)
பயிற்சிக்கு கட்டணம் : ரூ.500. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.
முன்பதிவிற்கு : 8300093777
முகவரி :ஷீலா தேவி இல்லம்,
245 ஊ சாய் சதன், 2-வது பிரதான சாலை,
9-வது குறுக்குத் தெரு, காமகோடி நகர்,
பள்ளிக்கரணை,
சென்னை – 600100.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்