குருவை சாகுபடி: ஆதிரெங்கம் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையத்தின் டிப்ஸ்

“”தாளடி நடவு பயிர் மழையால் பாதிக்கப்படாமல் இருக்க இயற்கை முறை தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்,” என ஆதிரெங்கம் இயற்கை வேளாண் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

  • திருத்துறைப்பூண்டி தாலுகாவில் 20 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடை முடிந்து தற்போது தாளடி சாகுபடி பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
  • கடந்த மாதம் 25ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. தாளடி நடவு செய்து வரும் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கான நாற்றுக்கு ஐந்து லிட்டர் பஞ்சகவ்யா, ஒரு கிலோ சூடோமோனாஸ் 100 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும்.
  • இதை ஒரு நாள் இரவு முழுவதும் வைத்திருந்து நாற்றின் வேர் பகுதியை இந்த பஞ்சகவ்யா கலவையில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
  • அப்போது வேர் அழுகல் நோய், அஸ்வினி தாக்குதல் போன்ற நோய்களுக்கு எதிர்ப்பு தியாகவும், கனமழையில் குறிப்பட்ட நாட்கள் வரை அழுகாமல் பயிர்களை பாதுகாக்க முடியும்.
  • மேலும் தாளடி நாற்றில் தொடர் மழை காரணமாக பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
  • தற்கு காலை பணி பதத்தில் நாற்று முழுவதும் நன்கு படும் வகையில் வசம்பு தூளை தெளிக்க வேண்டும். வசம்பு தூள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் கிடைக்கிறது.
  • மேலும் பஞ்சகவ்யா செயல் விளக்கத்துக்காக ஆதிரெங்கம் இயற்கை விவசாய பண்ணையில் ஒரு லிட்டர் பஞ்சகவ்யா இலவசமாக பெற்று கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு 09443320954 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *