கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

புதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில், கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம், 2012 நவம்பர்  16ம் தேதி நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் அறிவியல் நிலையத்தில் பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

கரும்பு சாகுபடியில் உரம் மற்றும் தண்ணீர் விரயம் ஆவதை தவிர்க்கவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் ஏதுவாக, துல்லிய பண்ணையம் என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை பின்பற்றி கரும்பு சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு வரும், 2012 நவம்பர்  16ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துவரும் விவசாயிகள் அனைவரும் இதில் பங்கேற்கலாம்.

இதுகுறித்து மேலும் தகவல் பெற விரும்பும் விவசாயிகள் வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தை, 04322290321 என்ற டெலிஃபோன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

நன்றி தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *