கருவேப்பிலை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சின்னசேலம் பகுதிகளில் கருவேப்பிலை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

  • சின்னசேலம் தாலுகாவில் பாண்டியங்குப்பம், தகரை, கல்லாநத்தம் உள்ளிட்ட 85 கிராமங்கள் உள்ளது. கரும்பு, மரவள்ளி, மக்காசோளம், கருவேப்பிலை பயிரிடுகின்றனர்.
  • குறைந்த செலவு அதிக லாபம் உள்ளிட்ட காரணங்களால் கருவேப்பிலை பயிரிடுவதில் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
  • கருவேப்பிலை ஒரு முறை நடவு செய்தால் 10 ஆண்டுகள் வரை அறுவடை செய்யலாம்.
  • மரமாக வளர 2 முதல் 5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • குத்தாக பயிரிடுவதற்கு 1 முதல் 2 மீட்டர் இடை வெளியில் நடவு செய்ய வேண்டும்.
  • வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதுமானது.
  • நடவு செய்த 7 மாதத்தில் இருந்து அறுவடை செய்ய முடியும்.
  • மாதத்திற்கு 2 முறை அறுவடை செய்யலாம்.
  • அறுவடை செய்யும் போது 10 செ.மீ., அளவு விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
  • ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
  • விழா காலங்களில் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
  • பராமரிப்பு செலவு குறைவு, அதிக லாபம், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் கருவேப்பிலை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கருவேப்பிலை பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *