கொடி வகை காய்கறிகள் பயிர் இடுவது எப்படி

தோட்டக்கலைதொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கொடி வகை காய்கறிகளை பயிரிட்டு, அதிக லாபம் பெறலாம் என, தோட்டக்கலை உதவி இயக்குனர் அனிலாகிங்ஸி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

  • கொடிவகை பயிர்களான பாகற்காய், புடலங்காய், பீர்க்கன் காய் வகை காய்கறி பயிர்கள் செய்யலாம். தற்போது பாகற்காயில் விவேக், அபிஷேக், ப்ரித்தி ஆகிய ரக விதைகள், புடலங்காய் கோ-1, கோ-2, பிகேஎம்-1, எம்டியு பிஎல்ஆர்(எஸ்ஜி-1) ஆகிய ரக விதைகள், பீர்க்கன்காய் கோ-1, கோ-2, அர்கா சுமீத் மற்றும் அர்கா சுஜாத் ஆகிய ரக விதைகளை விதைக்கலாம்.
  • தொழு உரம்நிலங்களை நன்கு உழவு செய்து சமன் செய்த பின், 2.5 அடி அகலத்திற்கு இரண்டுமீட்டர் நீளம்இடைவெளியில் குழிகளை தோண்ட வேண்டும்.
  • இவற்றில், 30க்கு 30 செ.மீ., அளவில் ஆழம் இருக்கும் அளவிற்கு குழிகள் அமைத்து, 10 நாட்கள் ஆறப்போட
    வேண்டும்.
  • ஒவ்வொரு குழிக்கும் மக்கிய தொழு உரம், 10 கிலோ இட வேண்டும். மேலும் அடியுரமாக ஒவ்வொரு குழிக்கும் 6:12:12 என்கிற அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கலவையை, 100 கிராம் அளவிற்கு இட வேண்டும்.
  • பூ பூக்கும் தருணத்தில்  ஒவ்வொரு குழிக்கும் 10 கிராம் தழை சத்தை இடவேண்டும்.
  • பாகற்காய் விதை ஒரு எக்டருக்கு4.5 கிலோ, புடலங்காய் விதை 1.5 கிலோ, பீர்க்கன்காய் விதை 1.5 கிலோ விதைகளை, ஒரு கிலோ விதைக்கு கேப்டான் அல்லது திரம் மருந்து 2 கிராம் என்ற அளவிற்கு கலந்து 24 மணி நேரம் வைத்த பின், விதைக்க வேண்டும்.
  • ஒரு குழியில், நான்கு விதைகள் விதைக்க வேண்டும். நன்கு வளர்ந்தவுடன், குழிக்கு இரண்டு செடிகள் வீதம் விட்டு, மீதம் உள்ள செடிகளை நீக்கி விட வேண்டும்.
  • விதைகள் முளைக்கும்வரையில் தண்ணீர் வாரம் ஒரு முறை பாய்ச்ச வேண்டும். பின்னர் களை நீக்க வேண்டும்.
  • கொடி படர, மூங்கில் தட்டிகள் 2 மீட்டர் உயரத்திற்கு அமைக்க வேண்டும். இவற்றில் கொடி படருமாறு செய்ய வேண்டும்.
  • எத்ரல் கரைசலை இரு இலைகள் விட்ட பின், வாரம் ஒரு முறை தெளித்தால் ஆண் பூக்கள் எண்ணிக்கை குறைந்து, பெண் பூக்கள் அதிகரிக்கும்.
  • இவற்றில், புடலங்காய்க்கு ஒரு மில்லி எக்ரல் 10 லிட்டர் நீரிலும், ஏனைய பயிர்களுக்கு 2.5 மி.லிட்டர் மருந்தை 10 லிட்டர் நீரிலும் கலக்க வேண்டும்.
  • சாம்பல் நோய் கட்டுப்படுத்த டை நோ காபர் ஒரு மில்லி அல்லது கார்பன்டைசிம் 0.5 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • அடி சாம்பல் நோய் கட்டுப்படுத்த மான்கோசெப் அல்லது குளோரோதளானில் இரண்டு கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்கள் இடைவெளி விட்டு தெளிக்க வேண்டும்.
  • 60 நாட்களில் அறுவடை இந்த நுட்பத்தில் பாகற்காய் மற்றும் பீர்க்கன்காய்களை 60நாட்களில் இருந்து ஒரு வாரம் வரையில் அறுவடை செய்யலாம்.
  • புடலங்காய் 80 நாட்களில் இருந்து அறுவடை செய்யலாம். இவற்றின் மூலம் 14 டன் பாகற்காய், 18 டன் புடலங்காய், 14 டன் பீர்க்கங்காய் அறுவடை செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி: தினமலர்/யாஹூ


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *