கொத்தவரை பயிரைத்தாக்கும் காய்ப்புழு

 

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:

 

  • இந்தப்பூச்சி பயறு வகைப் பயிர்களைத் தாக்கக்கூடிய முக்கியமான பூச்சிகளில் ஒன்று. கொத்தவரையைத் தவிர தக்காளி, பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, மொச்சை, அவரை, மிளகாய், சோயா மொச்சை போன்ற பல்வேறு பயிர்களையும் தாக்கக்கூடியது.
  • புழுக்கள் காய்களைத் துளைத்து உள்ளிருக்கும் விதைகளை உண்டு அதிக சேதம் விளைவிக்கக்கூடியவை.
  • புழுவின் தலையும் உடலின் முன்பகுதியும் மட்டுமே காய்களுக்குள் செல்லும். மதிப்பகுதி காயின் வெளியே காணப்படும்.
  • ஒரு புழு பல காய்களைத் தாக்கும். காய்கள் உண்டாவதற்கு முன் புழுக்கள் செடிகளின் குருத்துப் பகுதிகளையும் இலைகளையும் கடித்து உண்டு அழிக்கும்.

பூச்சியின் வாழ்க்கை சரிதம்:

  • பெண் அந்துப்பூச்சி, முட்டைகளை இலைகள், பூ மொக்குகள், பூக்கள், பிஞ்சுக்காய்கள் ஆகியவற்றின் மேல் தனித்தனியாக இடும்.
  • ஒரு பூச்சி 300-1000 முட்டைகள் வரையில் இடக்கூடியது.
  • அவை கோள வடிவமாகவும் இளம் மஞ்சள் நிறத்திலும் வரிவரியாக கோடுகளுடனும் தென்படும்.
  • இவை 3-5 நாட்களில் பொரித்து இளம் புழுக்கள் வெளிவரும். இளம் புழுக்கள் வெண்மை கலந்த மஞ்சள் நிறத்துடனும் கரும்பழுப்பு நிறத் தலையைக் கொண்டும் உடலில் நுண்ணிய கருமை நிறப் புள்ளிகளுடனும் மெல்லிய ரோமங்களுடனும் தென்படும்.
  • அவை 15-25 நாட்களில் முழு வளர்ச்சிஅடையும். வளர்ந்த புழுக்கள் மண்ணுக்கடியில் கூண்டுப்புழுக்களாக மாறும். கூண்டுப்புழுவிலிருந்து அந்துப்பூச்சி 10-15 நாட்களில் வெளிவரும். அந்துப்பூச்சிகள் தடிமனாகவும் இளம்பழுப்பு நிறத்திலும் தென்படும்.

பூச்சி கட்டுப்பாடு:

  • கொத்தவரை அறுவடைக்குப் பின் உடனடியாக செடிகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்.
  • வயலை நன்றாக உழுது மண்ணுக்கடியில் இருக்கும் கூண்டுப்புழுவை அழிக்கலாம்.
  • புழுக்களால் தாக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்துவிட வேண்டும்.
  • வயலில் காணப் படும் பெரிய புழுக்களை கையால் சேகரித்து அழிக்க வேண்டும்.
  • விளக்குப்பொறி வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
    இனக்கவர்ச்சிப் பொறிகளை ஏக்கருக்கு 5 வீதம் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
    டிரைக்கோகிரம்மா என்னும் முட்டை ஒட்டுண்ணி முட்டைகளை தாக்கி அழிக்கக்கூடியது.
  • பிரக்கான், கிலோனஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகள் புழுக்களைத் தாக்கி அழிக்கக்கூடியவை.

முனைவர் கோ.பி.வனிதா,
வேளாண்மைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை.
முனைவர் ரா.கோபாலகிருஷ்ணன்,
ரோவர் வேளாண்மைக் கல்லூரி, பெரம்பலூர்.

 

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *