கொய்யா வாடல் நோய் மேலாண்மை

‘வாடல் நோய் அறிகுறிகள்:

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar
  • வாடல் நோயானது ஐந்து வயதுக்கு மேற்பட்ட மரங்களில் தோன்றுகிறது.
  • இதனால் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்.
  • பின் இலைகள் பழுத்து கீழே உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட கொய்யா  மரங்களில் இருந்து புது தளிர்கள் மற்றும் பூக்கள் தோன்றாது.
  • பாதிக்கப்பட்ட மரங்களில் இருந்து தோன்றும் காய்கள் சிறியதாகவும் கல் போன்று கடினமானதாகவும் இருக்கும்.
  • வேர் பகுதி அழுகியும், பட்டைகள் எளிதாக உறிந்து விடும் நிலையில் காணப்படும்.
  • முற்றிய நிலையில் மரக்கிளைகளில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.மரம் முழுவதும் வாடி இறந்து விடும்.

வாடல் நோய் மேலாண்மை:

  • களைச் செடிகளை அப்புறப்படுத்தி வயல் வெளிகள், சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • தேவையான உரம் மற்றும் நீர் அளித்து மரத்தை வீரியத்துடன் பராமரிக்க வேண்டும்.
  • வாடல் நோய் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் ‘கார்பன்டசிம்’ மருந்தை கலந்து நோய் தாக்கிய மரத்தின் துாரை சுற்றி வேர்ப்பகுதி நனையும்படி மருந்து கலவையை ஊற்றி வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.

பேராசிரியர் ம.குணசேகரன்,தலைவர், பருத்தி ஆராய்ச்சி நிலையம்,ஸ்ரீவில்லிப்புத்துார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *