திராட்சையில் பரவி வரும் சாம்பல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.
- பனிக்காலம் தொடங்கி உள்ளதாலும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகி உள்ளதாலும் திராட்சை தோட்டங்களில் அடிச்சாம்பல் மற்றும் மேல்சாம்பல் நோய் தாக்கும் சூழ்நிலை உள்ளது.
- இந்த நோய் இலைகளை தாக்கும். பூங்கொத்தும், பிஞ்சுகளும் கூட பாதிக்கப்படுகிறது.
- இலையின் அடிப்பாகத்தில் வெண்மை நிற பூஞ்சாண வளர்ச்சி காணப்படும். அதற்கு நேர் எதிர் இலையின் மேல் பகுதி மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்.
- நோயின் தன்மை தீவிரமடைந்த நிலையில் இலையின் மேல்பகுதியில் பிரவுன் கலரில் இலைப்புள்ளிகள் காணப்படும்.
- புதிதாக முதிர்ந்த இலைகளையும் இந்நோய் தாக்கும்.
- இந்நோயினை கட்டுப்படுத்த போர்டோக் கலவை ஒரு சதவீதம், மேன்கோசெப் 0.2 சதவீதம், ரிடோமில் 0.2சதவீதம், அலியட்டில் 0.2 சதவீதம் இவற்றில் ஏதாவது ஒன்றினை கைத்தெளிப்பான் மூலம் நன்கு நனையம் வகையில் 15நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜன் கூறினார்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்