துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க வழிகள்

துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க டிஏபி கரைசலை பயிரின் மீது தெளிக்கலாம்

  •  துவரை பயிர் பூக்கும் தருவாயில் உள்ளது. தரமான மற்றும் அதிக மகசூல் பெறுவதற்கு கீழ்க்கண்ட தொழில்நுட்பத்தை விவசாயிகள் கையாளலாம்.
  • 12.5 கிலோ டிஏபி உரத்தை 25 லிட்டர் தண்ணீரில் ஊரவைக்க வேண்டும்.
  • இக்கரைசலை தெளிப்பதற்கு முன் வடிகட்டி, 600 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிரின் மீது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
  • மீண்டும் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு இருமுறை தெளிப்பதால் நல்ல திரட்சியான, தரமான விதைகள் கிடைப்பதோடு, ஹெக்டேருக்கு 1,000 முதல் 1,500 கிலோ வரை மகசூல் கிடைக்கும்

இவ்வாறு நாட்டறம்பள்ளி வேளாண்மை உதவி இயக்குநர் த.கணேசன் யோசனை தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “துவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க வழிகள்

  1. Balasubramanian V says:

    தாங்களின் காகத்தான விவசாய செய்திகளுக்கு பாராட்டுக்கள் எங்கள் ோன்ற விவசாயிகளுக்கு நல்ல விவசாய புதிய அறிவுரைகளை கொடுத்ததற்கு நன்றி தொர்ந்து தங்களின் அறிவுரைகளை விரும்பும்
    வே பாலசுப்ரமணியன்
    தென்கரை போஸ்ட் சோழவந்தான் வழி மதுரை மாவட்டம் பின்கோடு 625207 செல் 9789101568

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *