துவரை விளைச்சலை அதிகரிக்க யோசனைகள்

விவசாயிகள் நடவு முறையில் துவரை விளைச்சலை அதிகரிக்க திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் க.செல்வராஜ் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.விவசாயிகள் சரியான முறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்க, நடவு முறை துவரை சாகுபடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்றதாகும்.

Courtesy: Dinamani
Courtesy: Dinamani
  • ஏக்கருக்கு தேவையான ஒரு கிலோ விதையினைக் கொண்டு, பாலீதின் பைகளில் பராமரிக்கப்பட்டுள்ள 30 முதல் 40 நாள்கள் வயதுடைய துவரை நாற்றுகளை நடுவதற்கு சில நாள்களுக்கு முன்பு இள வெயிலில் வைத்து கடினப்படுத்தி பின்பு நடவுசெய்ய வேண்டும்.
  • ஏக்கருக்கு 5 டன் மக்கிய தொழு உரத்தினை இட்டு சமன்படுத்திய நடவு வயலில் அரை அடி (15 சதுர செ.மீ) அளவுள்ள குழிகளை 5-க்கு 3 அடி இடைவெளியில் எடுக்க வேண்டும். நாற்றுகளை நடவு செய்வதற்கு 15 நாள்களுக்கு முன்பு குழிகளை மண் எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும்.
  • பின்னர் ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும். ஊடு பயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன்பு உளுந்து, பாசிப் பயிறு, மொச்சை போன்ற விதைகளை விதைத்து, பிறகு துவரை நாற்றுகள் நடவு செய்ய வேண்டும்.
  • நடவு செய்த 20 முதல் 30 நாள்கள் கழித்து மண் அணைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர், 17 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை இடவேண்டும்.
  • மேலும் 4 கிலோ சிங்சல்பேட் உரத்தை செடியை சுற்றி இடுவதால் அதிக மகசூல் கிடைக்கும். பக்கக் கிளைகளை அதிகரித்து மகசூலை அதிகரிக்க, நடவு செய்து 20 முதல் 30 நாள்களில் 5 செ.மீ. அளவுக்கு நுனிக் குருத்தை கிள்ளிவிட வேண்டும்.
  • நடவு முறை துவரை சாகுபடி செய்யும் விவசாயிக்கு மானிய விலையில் இடு பொருள்கள் மற்றும் ஊக்கத்தொகை, தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “துவரை விளைச்சலை அதிகரிக்க யோசனைகள்

  1. dhananchezhiyan.d says:

    ஐயா கலப்படம் இல்லாத துவரை விதைகள் தமிழகத்தில் எங்கு கிடைக்கும் திருவண்ணாமலையில் கிடைக்குமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *