ஈரோட்டில் தென்னையில் மர்மநோய்

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தென்னை மரங்களில் மர்மநோய் தாக்கி வருவதால், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். மர்ம நோயை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க, புழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, சித்தோடு, கவுந்தப்பாடி, பவானி உட்பட பல பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக மர்ம நோய் தாக்குதலால், தென்னை மரங்கள் காய்க்காமல் போய்விடுகின்றன. மேலும் தென்னங்கீற்றுக்கள் வெள்ளையாகி, எதற்கும் பயனில்லாமல் போய் விடுகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பலர் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து பவானி விவசாயி செந்தில் கூறியதாவது:

  • எங்கள் நிலத்தில் உள்ள 200க்கும் மேற்பட்டதென்னை மரங்களில் மர்ம நோய் தாக்கியுள்ளது.
  • இந்நோய் தாக்குதலால், தென்னங்கீற்றுகள் முற்றிலும் வெள்ளை போன்ற ஒரு நிறத்தில், எதற்கும் பயனில்லாமல் போனது.
  • தென்னங்காய்கள் சிறியதாகி, இளநீர் பிடிக்காமல் உள்ளது.
  • சங்ககிரி, சென்னிமலை, பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், வளர்க்கப்படும் தென்னையில் மர்மநோய் தாக்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, தென்னையின் மர்ம நோயை ஒழித்து கட்ட, புழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
  • எங்கள் நிலத்தில் உள்ள பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் மீது, ஏழு பாக்கெட் புழுக்கள் தெளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மர்ம நோயின் தாக்கம் குறையும் என்று வேளாண் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *