தென்னையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

  • எலி மரத்தில் ஏறுவதைத் தடுக்க, பெரிய பனை ஓலையை நடுப்பாகத்தில் இரண்டாகப் பிளந்து, ஒரு பாகத்தை, மேல்மரத்தின் குலைக்கு அடியில் மரத்தை சுற்றி கட்டிவிடவேண்டும். இன்னொரு பாகத்தை முதலில் கட்டிய பகுதிக்கு எதிராக கட்டிவிடலாம்.
  • தென்னையில் பூ உதிர்தலை கட்டுப்படுத்த உப்பை பூ பகுதியிலும் வேர்ப்பகுதியிலும் இட்டு அதிக நீர் பாய்ச்சவேண்டும்.
  • தென்னை நடவு குழியில் கொழிஞ்சியை இட்டு, ஆறு மாதம் மட்க வைத்தபின் நடவு செய்யவேண்டும்.
  • தென்னை நடவுச் செய்வதற்கு முன்பு, வேரையெல்லாம் வெட்டி செய்தால், புதிய வேர் விரைவாக விட ஏதுவாகும்.
  • அரை வட்டக் குழி எடுத்து மரத்தைச் சுற்றி, எருக்களை 1 கிலோ, கொழிஞ்சி 1 கிலோ, 1 கிலோ பூதகள்ளி, 1 கிலோ மீன்கழிவு, 1 கிலோ, உப்பு 1 கிலோ இடுவதால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • தேங்காய் மட்டையை, மரத்தைச் சுற்றில் மண்போர்வையாக இடுவதால் முண் ஈரப்பதம் காக்கப்படுவதோடு, களையை கட்டுப்படுத்தலாம்.
  • தென்னை தோட்டத்தில் தென்னைக்கு ஊடே உள்ள பகுதியை ஜீன் – ஜீலை மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதத்தில் உழவுசெய்தால் வேர் பகுதியில்  நல்ல காற்றோட்டம் கிடைப்பதோடு, களையைக் கட்டுப்படுத்தலாம்.
  • வேப்ப எண்ணெய் தெளிப்பதால் பூ உதிர்தலை குறைக்கலாம்.
  • குரும்பை உதிர்வதை தடுக்க சாதாரண உப்பை வளர் நுனிப்பகுதியில் மரத்திற்கு 2 கிலோ வீதம் மழைக்காலத்தில் இடவேண்டும்.
  • குரும்பை உதிர்வதை தடுக்க சாம்பலை இடவேண்டும்.
  • குரும்பை உதிர்வதைக் கட்டுப்படுத்த, பூப்பதற்கு முன்பு மரத்தைச் சுற்றி வட்ட வடிவில் பாத்தி எடுத்து அதில் கொழிஞ்சி மற்றும் எருக்களையை இடலாம்.
  • பூச்சி மற்றும் எறும்பு தொல்லையை தடுக்க, நடவுக்கு முன்பு வேப்பம் புண்ணாக்கைக் குழிகளில் இடவேண்டும்.
  • தண்ணீர் மற்றும் ஆமணக்கு புண்ணாக்கு கலந்த மண் பாண்டங்களை அங்காங்கு தென்னை தோப்பிற்குள் சிறிய குழிகளில் வைத்திருந்தால் மூன்று நாட்களுக்குப் பின்பு, அதிலிருந்து கிளம்பும் வாடையினால் காண்டாமிருக வண்டு கவரப்பட்டு பானையில் விழுந்து இறந்து விடும்.
  • வேப்பம் புண்ணாக்குச் சாற்றை வளர் நுனியிலும், அதற்கடுத்த ஓலையிலும் கொட்டுவதால் காண்டமிருக  வண்டின் தாக்கதலைத் தடுக்கலாம்
  • தண்டு கூண் வண்டின் சேதாரத்தைக் கட்டுப்படுத்த துளை ஏற்பட்ட பகுதியில் சுத்தம் செய்து சாதாரண உப்பை நிரப்பி பின்பு மூடிவிடவேண்டும்.
  • தென்னை நாற்று நடும்போது 1-2 கிலோ உப்பை குழிகளில் கொட்டினால், கரையானைக் கட்டுப்படுத்துவதோடு ஈரப்பதத்தைக் காக்கலாம்.
  • தென்னை நடவு செய்யும்போது ஒரு ‘அகேல்’ இலைக் குழிகளில் நட்டால் ஈரப்பதம் காக்கப்படுவதோடு கரையான் தாக்குதலையும் தடுக்கலாம்.
  • தென்னைந்தோப்பில், நீரை அதிகம் தேக்கினால் கரையான் எல்லாம் நீரோடு அழிந்துவிடும்.
  • தென்னை மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 2-3 அடி வரை சுண்ணாம்பு பூசினால் கரையான் தாக்குதல் கட்டுப்படும்.
  • கரையான் தாக்குதலை கட்டுப்படுத்த, 500 கிராம் சாதாரண உப்பை 5 லி தண்ணீரில் கலந்து தண்டின் ஊற்றினால் போதும்.
  • கோழிகளை தென்னந்தோப்பில் வளர்ப்பதால், அவை கரையானை தின்றுவிடும்.
  • தஞ்சாவூர் வாடல் நோயைக் கட்டுப்படுத்த, பசுந்தாள் உரச்செடியாக கொழிஞ்சி அல்லது தக்கைப்பூண்டு செடியை வளர்த்து, மடக்கி உழலாம் அல்லது வேப்பம் புண்ணாக்கை நன்கு மட்கிய தொழு உரம் இட்டபின் இட்டு விடலாம்.
  • தென்னை தண்டு செவ்வொழுகல் (stem bleeding) யைக் கட்டுப்படுத்த ஒழுகல் பகுதியில் வாயை சுரண்டி சுத்தம் செய்து அதன்பின் சுண்ணாம்பு கரைசலை ஊற்றவேண்டும்.
  • மரத்தின் மீது எலி மற்றும் அணில் ஏறுவதைத் தடுக்க மரத்தின் அடியிலிருந்து 2-3 அடி உயரத்தில் சீமைக் கருவேல் கிளையைவோ முள் கம்பிவேலி சுற்றி கட்டினால் போதும்.
  • சிறிது நாட்டுக் சக்கரையை தேங்காய் எண்ணெயில் இட்டால் தூசுக்கள் எல்லாம் தனியாகப் பிரிந்து, எண்ணெய் தெளிவாக இருக்கும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *