புயல் பாதித்த இடங்களில் தென்னை பயிர் பராமரிப்பு முறைகள்

கடலூர் தானே  புயலால் பாதிக்கப்பட்ட  தென்னைப் பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

  • கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால் 1.5 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டன. உயிருடன் நிற்கும் தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கானவை, ஒருசில மட்டைகளுடன், மொட்டை மரங்களாகக் காட்சி அளிக்கின்றன.
  • புயலால் தென்னை மரங்கள் வேருடன் சாய்ந்தும், குருத்து ஒடிந்தும், மட்டைகள் ஒடிந்தும், குரும்பைகள், காய்கள் உதிர்ந்தும் காணப்படுகின்றன.
  •  குருத்தும், மட்டைகளும் ஒடிந்த தென்னை மரங்களைக் காப்பாற்ற, பழுத்து ஒடிந்த மட்டைகளை கூரிய கத்திக் கொண்டு சாய்வாகச் சீவி அகற்ற வேண்டும்.
  • ஒடிந்த நடுக் குருத்தைச் சுற்றியப் பகுதிகளை சுத்தம் செய்து, மட்டைகளை வெட்டிய பகுதிகளில் காப்பர் ஆக்ஸி குளோரைடு எனும் பூஞ்சாணக் கொல்லி (ஒரு பங்கு தண்ணீர் 2 பங்கு பைட்டோலான்) கலவையைப் பூசிவிட  வேண்டும்.
  • குருத்துப் பகுதியில் காயம்பட்ட இடத்தில் இதே பூஞ்சாணக் கொல்லியில் 2 கிராம் எடுத்து, ஒரு லிட்டர் நீரில் கலந்து ஊற்ற வேண்டும். இதனால் வெட்டுப் பகுதியிலும் குருத்துப் பகுதியிலும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உரங்களான ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் மற்றும் 3 கிலோ பொட்டாஷை 6 மாதங்களுக்கு ஒரு முறைப் பிரித்து இடவேண்டும்.
  •  ஊட்டச்சத்துகள் மற்றும் பயிர் ஊக்கிகள் கலந்த பசஅம தென்னை டானிக்கை மரம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 2 பாக்கெட் (200 மில்லி) என்ற அளவில், 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *