நெற்பயிரில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு

  • நெல் விதைகளை 12 மணி சாண எரிவாயு கலன் கழிவுகளில் நேர்த்தி செய்தால், நாற்றுக்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு உண்டாக்கும்.
  • கதிர் விடும் சமயத்தில் நெல் வயலில் ‘சைகஸ் சிர்சினாலிஸ்’ செடிமண் பூக்களை ஏக்கர் 4 இடங்களில் வைத்தால், அதிலிருந்து வரும் வாடை, கதிர் நாவாய் பூச்சியை விரட்டும்.
  • 30 கிலோ புளி விதையை ஒரு ஏக்கருக்கு நடவு நட்ட ஒரு நாள் பின்பு இட்டால் பயிர் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கும்.
  • நீர்த்த கோமியத்தில் நெல் விதைகளை ஊறவைத்து பின் விதைத்தால் இலைப்புள்ளி மற்றும் குலை நோய் தாக்குதல் குறையும்.
  • நெல் விதைகளை பாலில் ஊறவைத்து விதைத்தால் நெல் துங்ரோ மற்றும் நெல் குட்டை நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • நெல் விதைகளை புதினா இலைச்சாற்றில் 24 மணி நேரம் ஊறவைத்து விதைத்தால் சிவப்பு இலைப்புள்ளி நோய் கட்டுப்படுத்தும்.
  • ‘I’ வடிவ மூங்கில் கழிகளை நெல் வயலில் பல இடங்களில் வைத்தால், பறவைகள் உட்கார்ந்து, நெல்லில்தாக்கும் பூச்சிகளின் புழு மற்றும் பூச்சிகளை உண்ணும்.
  • ஆடிப் பெருக்கு அன்று விதை விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • நடவு வயலை 4 முதல் 6 தடவை உழவுச் செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும்.
  • ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட் – செப்டம்பர்) நடவு செய்தால் அதிக மகசூல் கிடைக்கும்.
  • அக்டோபர் – நவம்பர் மாதத்தில் நடவு செய்தால் – மகசூல் குறையும்.
  • காற்று திசையில் நடவு செய்தால், பயிர் நன்றாக செழிப்புடன் வளரும்.
  • ஆட்டுக்கிடை கோடையில் பொடு, அதிக மகசூல் பெறு.
  • ஆட்டுக்கிடை முதல் பருவம், பசுந்தாள் உரம் இரண்டாம் பருவம் இட அதிக மகசூல் கிடைக்கும்.
  • 100 கிலோ / ஏக்கர் பன்றி எரு இட்டால் 10 நாள் நடவு கழித்து இட்டால் அதிக மகசூல் பெறும்.
  • வேப்பம் புண்ணாக்குக்குப் பதில் வேப்பங்கொட்டை தூளை ஏக்கருக்கு இட்டால் நல்ல மகசூல் பெறலாம்.
  • களைகளைக்கட்டுப்படுத்த, விதைப்பிற்கு முன்போ அல்லது நடவுக்கு முன்போ, நீர்கட்டி களைகள் எல்லாம் முளைத்து வந்தவுடன், உழவுசெய்து, மண்ணில் மட்கச் செய்யவேண்டும்.
  • கோரைப்புல்லைக் கட்டுப்படுத்த, தக்கைப்பூண்டு செடியை பயிரிடலாம்.
  • நாற்றாங்காலில், இலைப்பேனை கட்டுப்படுத்த எருக்களை செடியை பசுந்தழை உரமாக இடவேண்டும்.
  • நெல்லில் இலைப்பேனை கட்டுப்படுத்த, வேப்பம்புண்ணாக்கு சாற்றை தெளிக்கவேண்டும்.
  • இலை மடக்குப்புழு தாக்கிய வயலில், நாட்டு இலந்தை அல்லது அயிலை தாவர கிளையை புதைக்கவேண்டும்.
  • நெல்லில் தண்டுத்துளைப்பானைக் கட்டுப்படுத்த, நீருடன் வேப்பெண்ணெய் 30 மிலி / லி என்ற விகிதத்தில் கலந்து  தெளிக்கலாம்.
  • தண்டு துளைப்பான் மற்றும் கதிர் காவாய் பூச்சியை கட்டுப்படுத்த செங்கல் சூளை சாம்பலை காலை வேளையில் இடலாம்.
  • கதிர் நாவாய் பூச்சியை கட்டுப்படுத்த, 10 கிலோ பசுமாட்டு சாணி சாம்பலுடன் 2 கிலோ சுண்ணாம்பு தூள் மற்றும் 1 கிலோ புகையிலை கழிவை கலந்து காலை வேளையில் பயிர் மீது தூவவேண்டும்.
  • கதிர் நாவாய் பூச்சியின் சேதாரத்தை கட்டுப்படுத்த, 100 மிலி கருவேல் இலை சாற்றுடன் 10 கிலோ சாணியுடன் 10 லி தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
  • தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த, எருக்களைச் செடியை 12 அடி இடைவெளியில் நெல் வயலின் எல்லாப்புறமும் வளர்க்கவோ, நடவோ செய்யலாம்.
  • வேர் அழுகல் மற்றும் நூற்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கை கடைசி உழவிற்கு முன்பு இடவேண்டும்.
  • பிரெளன் இலைப்புள்ளி  நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு உப்புடன் 15 கிலோ மணல் கலந்து இடவேண்டும்.
  • பிரெளன் இலைப்புள்ளி  நோயைக் கட்டுப்படுத்த, விதை நெல்லை 20 % புதினா இலைக்கரைசலில் ஊறவைத்து விதைக்கவேண்டும்.
  • நெல் ‘துங்ரோ’ நோயைக் கட்டுப்படுத்த, ஆடாதொடை இலை சாற்றை தெளிக்கலாம்.
  • பனை ஓலையைக் குச்சியில் கட்டி, வயல் ஓரத்தில் நட்டால், ஓலைக் காற்றில் ஆடும்போது ஏற்படும் ஓசையாக நெல்மணிகளை உண்ண வரும் வாத்து, குருவியிலிருந்து நெல்மணியைக் காக்கலாம்.
  • ஒரு நெல் கதிரில் 100 நெல்மணிகள் இருந்தால் 20-22 குவிண்டால் / ஏக்கர் மகசூல் கிடைக்கும்.
  • 120 நெல்மணிகள் ஒரு கதிரில் இருப்பின், அதுவே முழு மகசூலாகும்.
  • 6 அடிக்கு அதிக உயரமுள்ள பெரியமண் குதிரில் அதிக நாள் வரை நெல்லைச் சேமிக்கலாம்.
  • சேமிப்புக் கிடங்கில் நொச்சி, புங்கம் இலைகளைப் போட்டால் தானிய சேமிப்பு கிடங்கில் ஏற்படும் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
  • நெல்மணிகள், சேமிப்பதற்கு முன்பு, நெல்மணியுடன் புங்கம், நொச்சி மற்றும் வேம்பு இலைகளைக் கலந்தால் பூச்சித் தாக்கலை தடுக்கலாம்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்

நெற்பயிரை பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *