நெல் பயிரில் கைரா நோய்

துத்தநாக சத்து பற்றாக்குறையால் ஏற்படும் கைரா நோய்

வயலில் பள்ளமான பகுதிகளில் நெல் பயிர்கள் வளர்ச்சி குன்றி குட்டையாக, பக்க கிளைகள் அதிகம் காணப்படும்.

இலையின் பின்பகுதியில் இரும்பு துருபிடித்தது போல் காணப்படும், சத்து பற்றாக்குறை நோய் தீவிரமாகும்போது சிவந்து திட்டாக, திட்டாக தூர்கள் காய்ந்துவிடும். இது கைரா நோய் என்று அழைக்கப்படுகிறது.

இதை கட்டுப்படுத்த இளம் பயிரில் நடவு நட்ட 10 நாட்களுக்குள் ஏக்கருக்கு 12 கிலோ சிங்க்சல்பேட் 20 கிலோ மணலில் கலந்து தூவவேண்டும் அல்லது செலட்டடு சிங்க் சாயில் அப்ளிகேசன் 4 1/4 கிலோ, 20 கிலோ மணல் அல்லது 20 யூரியா இவற்றுடன் கலந்து வயலில் சீராக தூவவும், அல்லது 2கிலோ சிங்க்சல்பேட், 1 கிலோ யூரியா 200 லிட்டர் தண்ணீரில் அல்லது செலட்டடு சிங்க் போலியார் 100 கிராம், 150-200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலைவேளையில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

நன்றி: MS சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *