திருத்துறைப்பூண்டி வேளாண்மைக் கோட்டத்தில் சம்பா நேரடிவிதைப்பு செய்யப்பட்ட நிலங்களில் பயிர் முளைத்த வயல்களில் களைகளைக் கட்டுப்படுத்தி பயிரைப் பாதுகாக்க வேளாண்மைத்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மை உதவிஇயக்குநர் த. நடேசன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது:
- திருத்துறைப்பூண்டி வேளாண்மைக் கோட்டத்தில் இதுவரை 14ஆயிரத்து 72ஹெக்டேர் பரப்பில் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.
- இந்த நேரடிவிதைப்பு செய்யப்பட்ட வயல்களில் பயிர்கள் நன்றாக முளைத்து உள்ளன.
- கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழையினால் நிலத்தில் உள்ள ஈரத்தை பயன்படுத்தி,இனி முளைக்கும் களைகளைக் கட்டுப்படுத்திட ஏக்கருக்கு 400மி.லி பிரிட்டிலாக்குளோர் களைக்கொள்ளியை 20கிலோ மணலுடன் கலந்து நிலத்தில் நன்கு படும்படியாக தூவவேண்டும்.
- அல்லது 200லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளித்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- இந்த களைக்கொள்ளி அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் 50%மானிய விலையில் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
- களைக்கொல்லி தெளித்த 3தினங்களுக்கு பின்னர், 1செ.மீ நீர்கட்டி ஏக்கருக்கு டி.ஏ.பி.50கிலோ,பொட்டாஷ் 25கிலோ,துத்தநாகசல்பேட் 10கிலோ,அல்லது நெல்நுண்ணூட்டம் 5கிலோ, மேலும் 6 பாக்கெட் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியம் உயிர்உரங்களை 25கிலோ தொழுஉரத்துடன் கலந்து இடவேண்டும்.
- துத்தநாகசல்பேட், ஜிப்சம் நெல்நுண்மூட்ட உயிர்உரங்கள் தமிழக முதல்வரின் சம்பா சிறப்பு தொகுப்புத்திட்டத்தின் கீழ்75%மானியவிலையில் வழங்கப்படுகிறது.
- தேவையான டி.ஏ.பி, பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட் அனைத்து உரங்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
- நேரடி விதைப்பு செய்துள்ள விவசாயிகள் உழவு மானியத்தைப் பெற உரிய விண்ணபங்களைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் அளித்து பயன்பெற வேண்டுமென உதவிவேளாண்மைஇயக்குநர் த.நடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்