துரை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுவை என்ற கிராமத்தை சேர்ந்தவர். 38 வயது ஆனவர். நெல் மற்றும் பருப்பு சாகுபடி செய்பவர்.
இவர் ராஜராஜன் என படும் SRI நெல் சாகுபடியில் பயன் படுத்த படும் கோனோ வீடெர் என்ற இயந்திரத்தை மாற்றி அமைத்து விவசாயிகளுக்கு பயன் படும் படி செய்து உள்ளார்.
இந்திய அரசாங்கத்தால் 2010 வருடத்தில் விவசாய கண்டுபிடிப்புக்காக விருது வழங்கப்பட்டார்
இவரின் கண்டுபிடிப்பு பற்றி தெரிந்து கொள்வோம்
இந்த மாற்றி அமைக்க பட்ட கோனோ வீடெர் மனிதர்களால் இயக்க படுகிறது. நடந்து கொண்டே பயன் படுத்தி செல்லலாம். கீழே இருக்கும் ப்ளேடுகள் நிலத்தில் உள்ள களைகளை எடுத்து நிலத்திலேயே இட்டு விடுகின்றன
ஒரு நாளில் 0.20 ஹெக்டேர் வரை இந்த இயந்திரத்தை வைத்து களைநீக்கம் செய்ய முடியும். வேளாண் ஆட்கள் பஞ்சம் இருக்கும் இந்த நாட்களில் இந்த இயந்திரத்தை வைத்து களை எடுப்பது சுலபம். இதன் விலை ரூ 500 மட்டுமே.
இவரை தொடர்பு கொள்ள வேண்டிய விலாசம்:
திரு துரை
சிறுவை, வீடூர் போஸ்ட், வன்னுர் தாலுகா விழுப்புரம் மாவட்டம். அலைபேசி எண்: 09751582066
நன்றி: Indian Council of Agricultural Research
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்