ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுப்பயிர், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துக்களில் விதை உற்பத்தி செய்வது குறித்து தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2012 அக்டோபர் 31-ல் நெல்லில் தரமான விதை உற்பத்தி, 2012 நவம்பர் 1-ல் துவரை, உளுந்து மற்றும் பாசிப்பயறில் தரமான விதை உற்பத்தி, 2012 நவம்பர் 2-ல் நிலக்கடலையில் தரமான விதை உற்பத்திக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியில் விதை உற்பத்தி செய்வதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும், அதாவது, பயிருக்குத் தகுந்த பருவத்தைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, அறுவடை செய்து விதையை விற்பனைக்கு தயார்செய்வது வரை அனைத்து தொழில்நுட்பங்களும் விரிவாக பயிற்றுவிக்கப்படும்.
இந்தப் பயிற்சியில் விதை உற்பத்தி தொழில்முனைய ஆர்வமுள்ள ஊரக இளைஞர்கள், மகளிர் மற்றும் விவசாயிகள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.
வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேரிலோ அல்லது 04322290321, 08220015146 என்ற தொடர்பு எண்களிலோ முன்பதிவு செய்யலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்