நிலக்கடலை அதிக மகசூல் பெறுவது எப்படி?

எண்ணெய் நிலக்கடலையில் அதிக மகசூல் பெற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுததி​​ 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம் என்று தருமபுரி மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் கூறினார்.

  • விதை நிலக்கடலையை விதைக்கும் முன் உயிர் உரங்களான ரைசோபியம் ​(கடலை)​ 3 பாக்கெட்,​​ பாஸ்போ பாக்டீரியா பாக்கெட்டை சூடு குறைந்த அரிசிக் கஞ்சியில் கலந்து 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.
  • விதைப்புக்கு முன்,​​ ஒரு ஏக்கருக்கு 5 கிலோ கடலை நுண் சத்தை மணலுடன் கலந்து விதைக்க வேண்டும்.
  • பயிருக்குத் தேவையான பேரூட்டச் சத்துகளுடன்,​​ ​ நுண்ணூட்டச் சத்துகளும் பயிருக்கு கிடைத்து அதிக மகசூல் பெறலாம்.
  • ஜிப்சம் 80 கிலோவை மேலுரமாகவும்,​​ அடியுரமாகவும் விதைத்து 40 அல்லது 45 நாள்களில் செடிகள் பூத்து விழுதுகள் இறங்கும் காலத்தில் வயலில் இட்டு மண் அணைக்க வேண்டும்.
  • மேலுரமாக இடும்போது,​​ வயலில் போதிய ஈரப்பதம் இருக்க வேண்டும்.
  • இதனால் மண் பொலபொலவென இருப்பதால்,​​ விழுதுகள் இறங்கி காய்ப் பிடிக்க உதவும்.
  • காய்கள் முற்றி,​​ தரமான நிலக்கடலை உருவாக சுண்ணாம்புச் சத்தும்,​​ ​ எண்ணெயில் புரத அளவு அதிகரிக்க கந்தகச் சத்து உதவகிறது.
  • பூ,​​ பிஞ்சு உதிர்வதை தடுக்க,​​ பயிர் பூக்கும் தருணத்தில் நாள்கள் கழித்து மீண்டும் நுண்ணூட்டக் கரைசல் தெளிக்க வேண்டும்.
  • இரண்டு கிலோ டி.ஏ.பி.​ உரத்தை தண்ணீரில் கரைத்து 1 நாள் ஊறவைத்து,​​ மறுநாள் தெளிந்த கரைசலை வடிகட்டியப் பிறகு மற்ற உரங்களைக் கரைத்து 490 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் பூ மற்றும் பிஞ்சு உதிர்வதைத் தடுத்து,​​ அதிகமான மகசூல் பெறலாம் என்று அவர் கூறினார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *