இடை­வெ­ளி­விட்டு நடவு முறையில் கல்­யாண பூசணி

கல்­யாண பூச­ணியை இடை­வெளி விட்டு நடவு செய்தால், நல்ல விளைச்­சலை கொடுக்­கி­றது என்­கின்­றனர், காஞ்­சி­புரம் மாமண்டூர்
விவ­சா­யிகள்.
காஞ்­சி­புரம் அடுத்­துள்­ளது, துாசி மாமண்டூர்.

  • இங்கு, மேட்­டுப்­ப­கு­தி­களில் உள்ள விளை நிலங்­களில், விவ­சா­யிகள் வெள்­ளரி, அகத்தி கீரை, தர்­பூ­சணி, கல்­யாண பூசணி, அவரை, கத்­திரி ஆகியவற்றை, சாகு­படி செய்­கின்­றனர்.
  • கல்­யாண பூச­ணியை, 10 அடி அகலம், 8 அடி நீளத்­திற்கு இடை­வெ­ளி­விட்டு நடவு செய்தால், நல்ல விளைச்­சலை கொடுப்­ப­தாக விவ­சா­யிகள் கூறுகின்றனர்
  • கல்­யாண பூச­ணிக்காய், ஒவ்­வொரு அமா­வா­சையின் போது, அதி­க­ளவில் விற்­ப­னை­யா­கி­றது.
  • திருஷ்டி கழிக்க, பொது­மக்கள், வியா­பா­ரிகள் வாங்கி செல்­கின்­றனர்.
  • வெண்­பாக்கம், வேளாண்மை துறை அதி­கா­ரி­களின் ஆலோ­ச­னை­படி, இடை­வெ­ளி­விட்டு நடவு செய்யும் முறையை, கடை­பி­டித்து வரு­கிறோம்.
  • இதில், ஒவ்­வொரு செடியும் நன்கு படர்ந்து செல்­கின்­றன.
  • 45வது நாளில் பூக்க துவங்­கு­கி­றது.
  • அனைத்து பூக்­க­ளிலும் காய்கள் பிடிக்­கி­றது.
  • 85 வது நாளில், காய் அறு­வ­டைக்கு தயா­ரா­கி­றது.
  • குறைந்த செலவில், நிறைய லாபம் கிடைக்­கி­றது. ஒரு கல்­யாணி பூசணி, மூன்று முதல் ஐந்து கிலோ எடை வரை உள்­ளது.

இவ்­வாறு, விவ­சா­யிகள் கூறினர்.

நன்றி:  தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *