வாழையில் ஊடுபயிராக பூசணி, சேனை

கோபி வட்டாரத்தில் வாழையில் ஊடுபயிராக பூசணி பயிரிடப்பட்டுள்ளது.

  • வெள்ளைப் பூசணி மற்றும் சாம்பார் பூசணி தனியாகவும், வாழையில் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.
  • பூசணி, 90 முதல், 120 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். ஏக்கருக்கு, 20 டன் பூசணி கிடைக்கிறது.
  • சேனைக் கிழங்கு எட்டு மாத பயிர்.மஞ்சளில் அதிகளவில் ஊடுபயிர் செய்யப்படுகிறது.
  • களிமண் பகுதியில் சேனை கிழங்கு நன்கு வளரும்.
  • சேனைக் கிழங்கு பத்து மாத பயிராக இருந்தாலும், ஏழு மாதத்தில் அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு ஏக்கரில், 15 முதல் 20 டன் கிழங்கு உற்பத்தியாகிறது.

வாழை விவசாயி ஒருவர் கூறியதாவது:

  • கோபி சுற்று வட்டாரத்தில் வெள்ளை பூசணி, சாம்பார் பூசணி தனியாகவும், வாழையில் ஊடுபயிõகவும் பயிரிடப்பட்டுள்ளது.
  • பூசணிக்கு களை எடுக்கும் பணி இல்லை.
  • ஏக்கருக்கு 30 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
  • 15 முதல் 20 டன் கிடைக்கும்.
  • வெள்ளை பூசணி ஒரு டன் 7000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சிறிய காய் 5000 ரூபாய்க்கு கிடைக்கிறது.
  • சேனை கிழங்கு பயிரிட ஒரு ஏக்கருக்கு நான்கு டன் விதை இருந்தால் போதும்
  • மூன்று மாதத்துக்கு பிறகு களை எடுத்து, இரண்டு மூட்டை பொட்டாஷ், இரண்டு மூட்டை டி.ஏ.பி., வைத்தால் போதும்.
  • வெறும் எந்த பணியும் செய்ய தேவையில்லை.
  • ஏக்கருக்கு, 60 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். ஏக்கருக்கு, 15 முதல், 20 டன் கிடைக்கும்.
  • வாழை மற்றும் மஞ்சளில் செண்டுமல்லி ஊடுபயிராக செய்யலாம்.
  • ஒரு கிலோ பாக்கெட் செண்டுமல்லி விலை, 2,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
  • ஏக்கருக்கு ஒரு கிலோ விதை பயன்படுத்தலாம்.
  • மாதம் இரு முறை மருந்து தெளிக்க வேண்டும். செண்டுமல்லி மூன்று மாத பயிர். அறுவடைக்கு தயாரான பின், எட்டு வாரங்கள் பூ அறுவடை செய்யலாம்.
  • கிலோ ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். ஏக்கருக்கு எட்டு டன் பூ கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *