இலுப்பை சாகுபடி

அறிவியல் பெயர்: ஃபேசியா லேட்டி ஃபோலியா

இலுப்பை

பரவல்: இந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக வளர்கிறது.

பருவநிலை: வருட மழைப்பொழிவு 800 – மி.மீ முதல் 1800 மி.மீ வரை உள்ள பகுதிகளில் இம்மரங்கள் செழிப்பாக வளர்கின்றன.

மண்: மணல் கலந்த மண்ணில் சிறப்பாக வளரும் வண்டல் மண்ணிலும் சிறப்பாக வளர்கிறது.

நாற்றங்கால் தொழில்நுட்பங்கள்:

  • சூன் மற்றும் சூலை மாதங்களில் பழுத்த பழங்கள் உள்ள கிளைகளை உறுக்குவதன் மூலம் சேகரிக்கப்படுகின்றன.
  • இப்பழங்கள் தரைகளில் உரசப்பட்டு நீரில் உளற வைக்கப்பட்டு விதையுறைகளிலிருந்து விதைகள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
  • நாற்றங்காலில் பாத்திகள் அல்லது மண்,எரு மற்றும் மணல் கலந்த நெகிழ்தாள் பைகளில் நட்டு நீர் தெளிக்கப்படுகிறது.
  • இவ்விதைகள் நாற்றங்காலில் 30 செ.மீX 15 செ.மீ. இடைவெளிகளில் 1.5 முதல் 2.5 செ.மீ ஆழத்தில் ஊன்றப்படுகின்றன.
  • நட்டபின் 15 நாட்களுக்குப் பிறகே முளைக்கும்.
  • இந்நாற்றுகள் ஒராண்டு வரை நேரடியான வெயில் படாமல் பாதுகாக்கப்படுகின்றன.

நடவுமுறைகள்:

  • நாற்றங்காலில் உள்ள ஒராண்டு நிரம்பிய நாற்றுகள் வயல்களில் மழைக்காலங்களில் நடவு செய்யப்படுகின்றன.
  • வயல் நடவிற்கு 0.5மீ அகலமும் 0.5மீ நீளமும் உள்ள குழிகள் தோண்டப்பட்டு மே மற்றும் ஜீன் மாதங்களில் நடப்படுகிறது.
  • நடவின்பொழுது ஆணிவேரை அசைக்காமல் கவனத்துடன் நடவு செய்ய வேண்டும்.பிறகு நீர் தெளிக்கப்படுகிறது.
  • மூன்று மாத இடைவெளிகளில் களைநீக்கம் செய்து செடியைச் சுற்றிலும் லேசாகக் கொத்தி கிளறி விட வேண்டும்.
  • இரண்டு ஆண்டுகள் வரை களை நீக்கம் செய்வது அவசியம்.

பயன்கள்:

  • மிக்க கடினமான மரக்கட்டைகள் கட்டுமானம் மற்றும் மரச் சாமான்களிலும் பயன்படுகிறது.விதையிலிருந்து பெறப்படும்.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *