மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள்

மா மர கவாத்து தொழிற்நுட்பங்கள்

  • சிறிய அளவிலான குச்சிகள் மற்றும் நுனித்தண்டை வெட்டுவதற்கு வெட்டு கத்தரியையும், ஒன்று முதல் இரண்டு அங்குலம் வரை அகலமுள்ள கிளைகளை வெட்டுவதற்கு கவாத்து ரம்பத்தையும், இரண்டு முதல் இரண்டரை அங்குலம் அகலமுள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு கிளை வெட்டும் கத்தியையும் பயன்படுத்தலாம்.
  •  மா பெரிய மரக்கிளைகளை ரம்பம் மூலம் வெட்டும் போது அந்த கிளையின் அடிப்பகுதியில் இருந்து 20 முதல் 40 மி.மீ வரை மேல்நோக்கி வெட்ட வேண்டும்.
  • பிறகு மேலிருந்து வெட்ட வேண்டும். இவ்வாறு செய்யும் போது எளிதாகவும்,பிசிறுகள் இல்லாமலும் கிளைகளை வெட்ட முடியும்.
  •  சாய்வான கோணத்தில் கிளைகளை வெட்டும்போது வெட்டிய பகுதியில் நீர்த்துளிகள் தேங்காமலும், அழுகல் ஏற்படாமலும் இருக்கும்.
  • பெரிய கிளைகள் உள்ள மரத்தை வெட்டும் போது சிறு, சிறு பகுதிகளாக வெட்ட வேண்டும்.
  • சிறிய துண்டுகளாக கீழே விழும் போது மற்ற கிளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
  • கவாத்து செய்தபின் வெட்டப்பட்ட பாகத்தில் பூசணக்கொல்லிமருந்தை(போர்டோ கலவை) பசை போலத் தடவ வேண்டும்.
  • இல்லையென்றால் வெட்டுக்காயத்தின் வழியே பூசணங்கள் நுழைந்து நோய் உண்டாகும்.

நன்றி: ஜம்ஷெட்ஜி டாட்டா Virtual academy – M.S சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *