வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி

கோபி பகுதியில் வாழையில் ஊடுபயிராக கத்திரி சாகுபடி செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

  • நெல், கரும்பு மற்றும் மஞ்சள் போன்ற பயிர்களின் உற்பத்திக்கு பெயர் போன கோபி பகுதியில், ஐந்து ஆண்டுகளாக மாற்றுப்பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர்.
  • உரம் விலை பல மடங்கு உயர்வு, விவசாய கூலியாட்கள் பற்றாக்குறையால் நெல் சாகுபடியும், சரியான விலை கிடைக்காததாலும், குறித்த காலத்தில் கரும்பு வெட்டாததால் கரும்பு சாகுபடியும், நிரந்தர விலை இல்லாததால் மஞ்சள் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டுக்கு குறைந்து வருகிறது.
  • இதனால், குறுகிய காலத்தில் அதிக லாபம் தரக்கூடிய தோட்டக்கலை பயிர்களை கோபி விவசாயிகள் பயிரிடத் துவங்கியுள்ளனர். குறிப்பாக, கத்திரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், புடலை, மக்காச்சோளம், சேனை கிழங்கு, சாம்பாரில் பயன்படுத்தப்படும் வெள்ளை பூசணி, பொரியலில் பயன்படுத்தப்படும் சர்க்கரை பூசணி ஆகியவை அதிகம் பயிராகிறது.
  • 90 முதல் 120 நாட்களில் அறுவடைக்கு வரும் கத்திரி, பயிரிடுவதன் மூலம் இரண்டு முதல் ஐந்து டன் வரை கத்தரி கிடைக்கும். 25 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.
  • பனிக்காலத்தில் கத்திரி செடியில் பூக்கள் அழுகி விடும்; உற்பத்தி குறைவாக இருக்கும்
  • வாழையில் கத்திரி ஊடுபயிராக பயிரிட்டுள்ளதால், கோடை வெயிலிலும் சீராக பூ பூப்பதால் விளைச்சல் நன்றாக உள்ளது.
  • ஒரு ஏக்கர் வாழையில் ஊடுபயிராக கத்தரி பயிரிட்டால், இரண்டு முதல் ஐந்து டன் கத்திரி விளைச்சலாகும்.
  • செலவு போக, 25 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அனைத்து வகையான பயிர்களிலும் ஏதேனும் ஒரு வகையாக தோட்டக்கலை பயிர் ஊடுபயிர் செய்வது அதிகரித்துள்ளது. ஊடுபயிர் மூலம் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட லாபம் கிடைக்கிறது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *