வாழை சாகுபடிக்கான நிலத்தை தயார் படுத்துதல் எப்படி

  • வாழையின் நல்ல வளர்ச்சிக்கும், நல்ல மகசூலுக்கும் ஆழமான நல்ல வடிகால்தன்மை கொண்ட, நீர்ம பிடிப்புக் கொண்ட அதிக அளவில் கரிமப்பொருட்களுடைய வண்டல் மண், கார அமிலத்தன்மை(PH 6-8) மண்வகைகள் மிகவும் நல்லது.

நிலத்தை தயார்ப்படுத்துதல்:

  • நிலத்தை 3-4 முறை நன்றாக உழவு செய்தபின் ஹெக்டேருக்கு 10-15 டன்கள் நன்கு மக்கிய தொழுஉரத்தை நிலம் முழுவதும் இட்டு பின்பு மீண்டும் ஒருமுறை உழ வேண்டும்.
  • நிலமானது உவராக இருந்தால் பசுந்தாள் உரப் பயிரான தக்கைப்பூண்டு, சணப்பு ஆகியவற்றை வளர்த்து பூப்பதற்கு முன் அப்படியே நிலத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.
  • செம்பொறை மண் இருக்கும் இடங்களில் வேர் வளர்ச்சி தடைபடும் என்பதால் 2 அடி அகலமும் 2 அடி ஆழமும் உள்ள குழியில் மக்கிய தொழுஉரம், ஜிப்சம், நெல் உமிச் சாம்பல் ஆகியவை இட்டு நிரப்பி வாழை நடவு செய்ய வேண்டும்.
  • தோட்டக்கால் நிலங்களில் 2x2x2 அடி உயரம் ஆழம், அகலமுள்ள குழிகளில் கார்போபியூரான் 30gm DAP 10gm, புண்ணாக்கு 500 கிராம், மக்கிய தொழுஉரம் 5kg ஆகியவற்றை இட்டு பின்பு வாழை நடவு செய்யலாம்.

தகவல் : தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், திருச்சி. தகவல் அனுப்பியவர் – வினோத் கண்ணா, புதுக்கோட்டை

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *