வாழை சீப்பை பிரித்தெடுக்க பொதுவாக அரிவாள் அல்லது உள்ளூர் கத்தி போன்றவற்றை பயன்படுத்தி பிரித்து எடுக்கின்றனர்.
இம்முறையின் மூலம் பிரித்தெடுக்கும்போது பழங்கள் வெட்டுப்படுதல் மூலம் பழம் அழுகுதல் அதிகரிக்கின்றது.
இக்குறைபாட்டை களைய மத்திய அறுவடை பின்சார் பொறியியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம், லூதியானா, பஞ்சாப் மாநிலத்தில் வாழை சீப்பு பிரித்தெடுக்கும் கருவியை வடிவமைத்துள்ளனர்.
- இக்கருவி அனைத்துவித வாழைத்தார்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
- எளிதாக மிக குறைவான அழுத்தத்தை மேலிருந்து கீழாக செலுத்தினால் வாழை சீப்பை பிரித்தெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இக்கருவியின் மூலம் 2-8 சதவீத வாழை வெட்டுப்படுதலை கட்டுப்படுத்த முடியும்.
- (வியாபாரிகளிடம் நடத்திய ஆய்வில் 150 பழம் உள்ள தாரில் 10-15 வாழைப்பழங்கள் வெட்டப்படுவதன் மூலம் 2-8% இழப்பு ஏற்படுவதாக அறியப்பட்டது).
- இக்கருவியின் விலை ரூ.150/-. தகவல்: முனைவர் மீனாட்சி, முனைவர் கணேஷ்ராஜா, போன்: 04567230250.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்