இஸ்ரேல நாட்டில் நடந்த விவசாய கண் காட்சியை நம் நாட்டில் இருந்து 2000 இந்திய விவசாயிகள் சென்று பார்த்து வந்து உள்ளனர்.
நம் எல்லோர்க்கும் இஸ்ரேல நாடு எப்படி விவசாயத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று தெரியும். சொட்டு நீர் பாசனம், துல்லிய விவசாயம் போன்ற பல வித தொழிற் நுட்பங்கள் அங்கே இருந்து தான் கண்டு பிடிக்க பட்டன.
தம்ழி நாட்டில் இருந்து இஸ்ரேல விவசாய கண்காட்சியை நேரில் சென்று பார்த்து வந்த தமிழ் நாடு இயற்கை விவசாய ஆர்வலர் திரு தூரன் நம்பி கூறுகிறார்:
- தமிழ் நாட்டில் இருந்து மட்டும் 400 பேர் இஸ்ரேல வந்தனர். நாங்கள் எல்லோரும் எங்கள் கை காசை செலவு செய்து சென்று வந்து உள்ளோம். மற்ற மாநிலங்கள் இதற்கு உதவி செய்தது போல் தமிழ் நாடு அரசு செய்ய வேண்டும
- இஸ்ரேல நாடு மிக சிறிய நாடு. வறட்சி அதிகம். அனால், அங்கே அரசு விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மனித வளத்தின் ஆதாரம் விவசாயம் என்று நம்புகிறது
- இஸ்ரேல நாடு விவசாயத்தில் முன்னேற காரணம் நீரை மிகவும் சிக்கனமாக செலவு செய்வதும் சூரிய சக்தியை செலவு செய்வதும். நம் நாட்டிலும் இதே யுக்திகளை கையாண்டால் நாமும் முன்னேறலாம்.
- இவர்களின் பயண அனுபவங்களை தெரிந்து கொள்ள திரு தூரன் நம்பியை என்ற 09443045690அலை பேசியில் தொடர்பு கொள்ளலாம்
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்