பருவநிலை மாற்றங்களால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களில் மகசூல் இழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து விவசாயிகளும் “வானிலை சார்ந்த பயிர்க் காப்பீட்டு திட்டத்தில்‘ சேர்ந்து பயனடைய வேண்டும்.
ஒவ்வொரு வட்டாரத்திலும் தானியங்கி வானிலை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் உதவியுடன் பருவநிலை மாற்றங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுவதுடன், இந்த திட்டத்தில் சேர்ந்து பிரிமியம் செலுத்தும் விவசாயிகளுக்கான காப்பீட்டுத் தொகை நேரடியாக கம்பெனி மூலம் காசோலையும் அனுப்பி வைக்கப்படும்.
விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் வரியுடன் ஏக்கருக்கு மக்காச்சோளத்திற்கு 276 ரூபாயும், மற்ற சிறு தானியங்களுக்கு 138 ரூபாயும், நிலக்கடலைக்கு 386 ரூபாயும், பருத்தி (இறவை) 827 ரூபாயும், மானாவாரி பருத்திக்கு 529 ரூபாயும், பயறு வகை பயிர்களுக்கு 138 ரூபாயும் செலுத்த வேண்டும்.
இதற்கான படிவங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கப்பட்டு, பிரிமியம் தொகையும் அங்கேயே செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயிர் காப்பீடு செய்தால், மகசூல் மற்றும் பொருளாதார இழப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்