நிலக்கடலை, ஆமணக்கு சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2016 ஆகஸ்ட்  8ம் தேதி (திங்கட்கிழமை) நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள் என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 8ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 9 மணிக்கு ‘நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி தொழில் நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. 

இப்பயிற்சியில், நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடியின் முக்கியத்துவம், மண் பரிசோதனை, வீரிய ஒட்டு ரகங்கள், விதை நேர்த்தி செய்தல், விதி உற்பத்தி செய்யும் முறைகள் பற்றி விளக்கி கூறப்படுகிறது. பயிர் இடைவெளி, விதைக்கும் முறைகள், உர நிர்வாகம் (நுண்ணூட்ட உரம் மற்றும் உயிர் உரம்), களை நிர்வாகம், பல்வேறு வகையான கலைக்கொல்லிகள் உபயோகப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப் படுகிறது. 

மேலும், நீர் நீர்வாகம், பயிர் வளர்ச்சி ஊக்கி தெளித்தல், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் கலைக்கொடியை சேமிக்கும் முறைகள், தீவனமாக பயன்படுத்தும் தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

பங்கேற்க விரும்புவோர் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு வரும் 7ம் தேதிக்குள், தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.தொடர்பு எண் : 04286266345 , 04286266650

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *