அங்கக வேளாண்மை, இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் சென்னையில் புதன்கிழமை (2015 ஜூலை 22) நடைபெறவுள்ளது.
சென்னை, அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்தில் அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த முகாம் நடைபெறும்.
இதில் இயற்கை முறையில் உரம், பூச்சிக்கொல்லி, செடியின் உற்பத்தித் திறன் மேம்பாடு, மண்வளப் பாதுகாப்பு, நஞ்சில்லா வேளாண்மை போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
மேலும் வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம், தொட்டிச் செடி பராமரித்தல், புறநகர் காய்கறிகள், தானியங்கள் உற்பத்தியில் அங்கக வேளாண் நுட்பங்கள் ஆகியவை குறித்து தகவல்கள் வழங்கப்படும்.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 04426263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து மேலும் தகவல் பெற, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையம், எண் யு-30, 10-ஆவது தெரு, அண்ணா நகர், சென்னை- 600 040 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்