இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் பண்ணை ஆராய்ச்சி மற்றும் உலக உணவுப் பாதுகாப்பிற்கான நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவமான ” வானகம் இயற்கை வேளாண் பண்ணையில் ” நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் வருகிற ஜூன் மாதம் 15.6.2012 முதல் 19.6.2012 ஆகிய 5 நாட்களில் இயற்கை வாழ்வியல் பயிற்சி நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சியில் உழவில்லாத வேளாண்மை, மருந்து இல்லாத மருத்துவம் குறித்த பயிற்சி & கலைந்துரையாடல் நடைபெறும்.

செய்முறைப் பயிற்சி, பார்த்துணர்தல் மூலம் பயிற்சி நடைபெறும்.

இந்த களப்பயிற்சியை ” இயற்கை ஞானி நம்மாழ்வார் ” அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.

ஏங்கல்ஸ் ராஜா இந்த பயிற்சியை வழி நடத்துவதோடு பயிற்சியும் அளிக்கிறார்.5 நாட்களும் தங்கி பயிலுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். தங்குமிடம், உணவு இலவசம்.

முன்பதிவு அவசியம் .

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 09787648002


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *