நெற்பயிரில் இயற்கை பூச்சி மேலாண்மை

பச்சை தத்துப்பூச்சி:
மேலாண்மை:

  • ஐ. ஆர் 50, சி ஆர் 1009, கோ 46, பட்டாம்பி 2 மற்றும் 18 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
  • விளக்குக் கம்பத்தின் அருகில் நாற்றாங்கால் அமைப்பதை தடுத்தல்.
  • 20 சென்ட் நாற்றாங்காலுக்கு 12.5 கிலோ வேப்பபுண்ணாக்கினை இட வேண்டும்.
  • நாற்று நட்ட நாள் முதல் , 3 நாட்கள் வரை 2.5 சென்டி மீட்டர் அளவு நீரானது இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.

பழுப்புஇலை தத்துப்பூச்சி:
மேலாண்மை:

  • பட்டாம்பி 33 &  21 , பையூர் 3 , கோ 42, ஆஷா, திவ்யா, அருணா, கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ண வேணி போன்ற  எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
  • நடவு வயலில் ஒவ்வொரு 2.5 மீட்டர் அகலத்திற்கு 30 சென்டி மீட்டர் இடைவெளி விடுதல்.
  • தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல்.
  • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
  • 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு (25 கிலோ / ஹெக்டர்) அல்லது 2 சதவிகித வேப்பஎண்ணெய் (10 லிட்டர் / ஹெக்டர்) தெளித்தல்.

வெண் முதுகு தத்துப் பூச்சி :
மேலாண்மை :

முட்டை ஒட்டுண்ணியான , அனாகிரஸ் எனும் பூச்சியின் முதிர்பூச்சி மற்றும் இளங்குஞ்சுகளை வயலில் விடுவிக்கலாம்.

மாவுப் பூச்சி:
மேலாண்மை:

  • நாற்று நடுவதற்கு முன்பாக வரப்புகளில் உள்ள புற்களையும், களைகளையும் அகற்ற வேண்டும்.
  • தாக்கப்பட்ட பயிர்களையும் சேர்த்து அழிக்க வேண்டும்.

நெல் கருநாவாய்ப் பூச்சி:
மேலாண்மை:

  • களைகள் இல்லாமல் நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்.
  • தேவைக்கு அதிகமான நீரை அகற்ற வேண்டும்.
  • விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
  • கருநாவாய்ப் பூச்சிகளை, வாத்துகளை  நாற்றுகளில் விடுவதன் மூலம் கட்டுப்படுத்துதல்.

கதிர் கருநிற நாவாய்ப் பூச்சி:
மேலாண்மை:

  • வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம்.
  • நொச்சி இலைப் பொடியின் சாறு 5 சதம்.

நெல் தண்டுதுளைப்பான்:
மேலாண்மை:

  • ரத்னா, ஜெயா, டி.கே.எம் 6 , ஐ. ஆர் 20 & 26 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
  • நாற்றுப் பறித்து நடவு செய்வதற்கு முன் நாற்றின் நுனியை கிள்ளி எடுத்தல் வேண்டும். இதனால் பூச்சிகளின் முட்டைகளையும் அகற்றலாம்.
  • முட்டைகளை சேகரித்து அழித்தல்.
  • பாதிக்கப்பட்ட கொத்தினை பிடுங்கி அழித்தல்.
  • டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விட வேண்டும்.

ஆணைக் கொம்பன்  ஈ :

  • எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளான சக்தி , விக்ரம், சுரேகா , எம்.டி.யூ -3 ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
  • அறுவடை செய்தவுடனேயே நிலத்தை உழ வேண்டும்.
  • குறைந்த காலத்தில் முதிர்ச்சி அடையக்கூடிய பயிர்களை தேர்வு செய்தல் நன்று.
  • அகச் சிவப்புக் கதிர் விளக்கப் பொறி , ஆணைக் கொம்பன் ஈக்களை கவரக் கூடியவை.
  • புழுப் பருவ ஒட்டுண்ணியை (பிளாட்டிகாஸ்டர் ஒலைசே) நாற்று நடவு செய்த 10 நாட்களுக்குப் பின்னர் 10 X 10 மீட்டர் அளவு நிலத்திற்கு ஒரு ஒட்டுண்ணி என்ற கணக்கில் வயலில் விடுவிக்கவும்.
  • நன்மை பயக்கும் பூச்சியான தரைவண்டு (கராபிட்) ஆணைக் கொம்பன் ஈக்களை உணவாக உட்கொள்ளும்.
  • எட்டுக்கால் பூச்சிகளை வயல்களில் பயன்படுத்தலாம்.

கூட்டமாக வாழும் புழு :

  • புழுப் பருவ ஒட்டுண்ணிகளை உபயோகிக்கலாம். எ.டு. மெட்டியோரஸ் , சாரோபஸ் பைக்காலர், அபான்டலஸ் , டாக்கினியா , கீலோனஸ்
  • நாற்றங்காலில்  நீர் பாய்ச்சி , நீரை தேக்கினால் , மண்ணில் புதைந்துள்ள முட்டைகள் மேலே மிதந்து வரும். அவ்வாறு வரும் முட்டைகளை, பறவைகள் கொத்தித் திண்று விடும்.
  • மண்ணெணையை நீரில் கலந்து நீர்ப்பாசனம் செய்வதினால்ஈ புழுக்கள் சுவாசிக்க வழியின்றி அழிந்து விடும்.
  • வாத்துக்களை பூச்சி உண்ண வயல்களில் அனுமதிக்கலாம்.

கதிர் கூண்டுப்புழு :
மேலாண்மை:

  • எதிர்ப்புதிறன் கொண்ட பயிர் வகைகளான , காவேரி , டி.ஏன்.ஏ.யூ எல். எஃப்.ஆர் 831 311 , ஆகாஷி, டிகே.எம்-6 , ஜ.ஈ.டி751 , ஜ.ஈ.டி 9225, ஜ.ஈ.டி 9797 ஆகியவற்றை பயன்னடுத்தலாம்.
  • பாதிக்கப் பட்ட இலைகளை கிள்ளி எரிதல் வேண்டும்
  • வரப்புகளை புற்களின்றி சுத்தமாக வைத்தல் அவசியம்.
  • அதிகப்படியான தழைச் சத்து உரத்தின் பயன்படுத்தாமலிருப்பது நல்லது.
  • வேப்பங் கொட்டை சாற்றிளை பயன்படுத்தலாம்
  • டிரைக்கோகிராமா கிலோனிஸ் எனும் ஒட்டுண்ணியை நாற்றுநட்ட 37, 44,57 நாட்களுக்கு பிறகு வயலில் விடுவிக்கலாம். பின்னர் மூன்று முறை மோனோகிரோடோபஸ் எனும் பூச்சி கொல்லியை 58 , 65 , 72 ஆம் நாள் தெளிக்க வேண்டும்.

வெட்டுக் கிளி :
மேலாண்மை

  • நிலத்தை உழுவதன் மூலம் , மண்ணில் புதைந்நுள்ள பூச்சி முட்டைகளை வெளியே கொண்டு வரலாம். இவற்றை பறவைகள் கொத்தி தின்றுவிடும்.
  • உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகளான காக்கலஸ், பாரிக்கோமஸ் , சீலியோ போன்ற முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்.

முள்ளுவண்டு
மேலாண்மை :

  • வெளிறிய பரப்பு கொண்ட இலை நுணிகள் கிள்ளி எறியப் பட வேண்டும்.
  • வண்டுகளை சிறிய வலைகளைக் கொண்டு பிடித்து அழிக்கலாம்.

நெல்லின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை:
A. சாகுபடி முறை:

  • அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள தாள்களை அகற்றவும்.
  • களைகள் நிலத்தில் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
  • எலிகளின் சேதத்தை கட்டுப்படுத்த, படுக்கினை சிறியதாகவும் , அகலம் குறைந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
  • எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
  • வடிகால் வாய்க்கால்களை அமைத்து பூச்சியினை கட்டுப்படுத்துதல்.
  • தேவைக்கு அதிகமான உரத்தின் பயன்பாட்டைத் தவிர்த்தல்.

 

உயிரியல் முறைகள்:

  • டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விடுவதால் தட்டுத்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
  • டிரைக்கோகிரம்மா சில்லோனிஸ் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 37வது, 44வது மற்றும் 51 வது நாட்களில் விடுவதால் இலைப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.

தாவர பொருட்கள்:

  • வேப்பங்கொட்டைச் சாறு கரைசல் 5 சதம் ( 25 கிலோ / ஹெக்டர்) வேப்ப எண்ணெய் 3 சதம் ( 15 கிலோ / ஹெக்டர்) என்ற அளவில் தெளிக்கும் போது பழுப்பு தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.
  • தாவர பொடிகளான வேப்பங்கொட்டைப் பொடி, நொச்சி , புரோஸோபிஸ் போன்றவற்றினை 5 சதம்  என்ற அளவில் தெளிக்கும் போது கதிர் நாவாய்ப் பூச்சி மற்றும் கருநாவாய்ப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *