பச்சை தத்துப்பூச்சி:
மேலாண்மை:
- ஐ. ஆர் 50, சி ஆர் 1009, கோ 46, பட்டாம்பி 2 மற்றும் 18 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
- விளக்குக் கம்பத்தின் அருகில் நாற்றாங்கால் அமைப்பதை தடுத்தல்.
- 20 சென்ட் நாற்றாங்காலுக்கு 12.5 கிலோ வேப்பபுண்ணாக்கினை இட வேண்டும்.
- நாற்று நட்ட நாள் முதல் , 3 நாட்கள் வரை 2.5 சென்டி மீட்டர் அளவு நீரானது இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.
பழுப்புஇலை தத்துப்பூச்சி:
மேலாண்மை:
- பட்டாம்பி 33 & 21 , பையூர் 3 , கோ 42, ஆஷா, திவ்யா, அருணா, கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ண வேணி போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
- நடவு வயலில் ஒவ்வொரு 2.5 மீட்டர் அகலத்திற்கு 30 சென்டி மீட்டர் இடைவெளி விடுதல்.
- தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல்.
- விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
- 5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு (25 கிலோ / ஹெக்டர்) அல்லது 2 சதவிகித வேப்பஎண்ணெய் (10 லிட்டர் / ஹெக்டர்) தெளித்தல்.
வெண் முதுகு தத்துப் பூச்சி :
மேலாண்மை :
முட்டை ஒட்டுண்ணியான , அனாகிரஸ் எனும் பூச்சியின் முதிர்பூச்சி மற்றும் இளங்குஞ்சுகளை வயலில் விடுவிக்கலாம்.
மாவுப் பூச்சி:
மேலாண்மை:
- நாற்று நடுவதற்கு முன்பாக வரப்புகளில் உள்ள புற்களையும், களைகளையும் அகற்ற வேண்டும்.
- தாக்கப்பட்ட பயிர்களையும் சேர்த்து அழிக்க வேண்டும்.
நெல் கருநாவாய்ப் பூச்சி:
மேலாண்மை:
- களைகள் இல்லாமல் நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்.
- தேவைக்கு அதிகமான நீரை அகற்ற வேண்டும்.
- விளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
- கருநாவாய்ப் பூச்சிகளை, வாத்துகளை நாற்றுகளில் விடுவதன் மூலம் கட்டுப்படுத்துதல்.
கதிர் கருநிற நாவாய்ப் பூச்சி:
மேலாண்மை:
- வேப்பங்கொட்டைச் சாறு 5 சதம்.
- நொச்சி இலைப் பொடியின் சாறு 5 சதம்.
நெல் தண்டுதுளைப்பான்:
மேலாண்மை:
- ரத்னா, ஜெயா, டி.கே.எம் 6 , ஐ. ஆர் 20 & 26 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.
- நாற்றுப் பறித்து நடவு செய்வதற்கு முன் நாற்றின் நுனியை கிள்ளி எடுத்தல் வேண்டும். இதனால் பூச்சிகளின் முட்டைகளையும் அகற்றலாம்.
- முட்டைகளை சேகரித்து அழித்தல்.
- பாதிக்கப்பட்ட கொத்தினை பிடுங்கி அழித்தல்.
- டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விட வேண்டும்.
ஆணைக் கொம்பன் ஈ :
- எதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளான சக்தி , விக்ரம், சுரேகா , எம்.டி.யூ -3 ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
- அறுவடை செய்தவுடனேயே நிலத்தை உழ வேண்டும்.
- குறைந்த காலத்தில் முதிர்ச்சி அடையக்கூடிய பயிர்களை தேர்வு செய்தல் நன்று.
- அகச் சிவப்புக் கதிர் விளக்கப் பொறி , ஆணைக் கொம்பன் ஈக்களை கவரக் கூடியவை.
- புழுப் பருவ ஒட்டுண்ணியை (பிளாட்டிகாஸ்டர் ஒலைசே) நாற்று நடவு செய்த 10 நாட்களுக்குப் பின்னர் 10 X 10 மீட்டர் அளவு நிலத்திற்கு ஒரு ஒட்டுண்ணி என்ற கணக்கில் வயலில் விடுவிக்கவும்.
- நன்மை பயக்கும் பூச்சியான தரைவண்டு (கராபிட்) ஆணைக் கொம்பன் ஈக்களை உணவாக உட்கொள்ளும்.
- எட்டுக்கால் பூச்சிகளை வயல்களில் பயன்படுத்தலாம்.
கூட்டமாக வாழும் புழு :
- புழுப் பருவ ஒட்டுண்ணிகளை உபயோகிக்கலாம். எ.டு. மெட்டியோரஸ் , சாரோபஸ் பைக்காலர், அபான்டலஸ் , டாக்கினியா , கீலோனஸ்
- நாற்றங்காலில் நீர் பாய்ச்சி , நீரை தேக்கினால் , மண்ணில் புதைந்துள்ள முட்டைகள் மேலே மிதந்து வரும். அவ்வாறு வரும் முட்டைகளை, பறவைகள் கொத்தித் திண்று விடும்.
- மண்ணெணையை நீரில் கலந்து நீர்ப்பாசனம் செய்வதினால்ஈ புழுக்கள் சுவாசிக்க வழியின்றி அழிந்து விடும்.
- வாத்துக்களை பூச்சி உண்ண வயல்களில் அனுமதிக்கலாம்.
கதிர் கூண்டுப்புழு :
மேலாண்மை:
- எதிர்ப்புதிறன் கொண்ட பயிர் வகைகளான , காவேரி , டி.ஏன்.ஏ.யூ எல். எஃப்.ஆர் 831 311 , ஆகாஷி, டிகே.எம்-6 , ஜ.ஈ.டி751 , ஜ.ஈ.டி 9225, ஜ.ஈ.டி 9797 ஆகியவற்றை பயன்னடுத்தலாம்.
- பாதிக்கப் பட்ட இலைகளை கிள்ளி எரிதல் வேண்டும்
- வரப்புகளை புற்களின்றி சுத்தமாக வைத்தல் அவசியம்.
- அதிகப்படியான தழைச் சத்து உரத்தின் பயன்படுத்தாமலிருப்பது நல்லது.
- வேப்பங் கொட்டை சாற்றிளை பயன்படுத்தலாம்
- டிரைக்கோகிராமா கிலோனிஸ் எனும் ஒட்டுண்ணியை நாற்றுநட்ட 37, 44,57 நாட்களுக்கு பிறகு வயலில் விடுவிக்கலாம். பின்னர் மூன்று முறை மோனோகிரோடோபஸ் எனும் பூச்சி கொல்லியை 58 , 65 , 72 ஆம் நாள் தெளிக்க வேண்டும்.
வெட்டுக் கிளி :
மேலாண்மை
- நிலத்தை உழுவதன் மூலம் , மண்ணில் புதைந்நுள்ள பூச்சி முட்டைகளை வெளியே கொண்டு வரலாம். இவற்றை பறவைகள் கொத்தி தின்றுவிடும்.
- உயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகளான காக்கலஸ், பாரிக்கோமஸ் , சீலியோ போன்ற முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்.
முள்ளுவண்டு
மேலாண்மை :
- வெளிறிய பரப்பு கொண்ட இலை நுணிகள் கிள்ளி எறியப் பட வேண்டும்.
- வண்டுகளை சிறிய வலைகளைக் கொண்டு பிடித்து அழிக்கலாம்.
நெல்லின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை:
A. சாகுபடி முறை:
- அறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள தாள்களை அகற்றவும்.
- களைகள் நிலத்தில் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.
- எலிகளின் சேதத்தை கட்டுப்படுத்த, படுக்கினை சிறியதாகவும் , அகலம் குறைந்ததாகவும் இருத்தல் வேண்டும்.
- எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.
- வடிகால் வாய்க்கால்களை அமைத்து பூச்சியினை கட்டுப்படுத்துதல்.
- தேவைக்கு அதிகமான உரத்தின் பயன்பாட்டைத் தவிர்த்தல்.
உயிரியல் முறைகள்:
- டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விடுவதால் தட்டுத்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.
- டிரைக்கோகிரம்மா சில்லோனிஸ் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 37வது, 44வது மற்றும் 51 வது நாட்களில் விடுவதால் இலைப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.
தாவர பொருட்கள்:
- வேப்பங்கொட்டைச் சாறு கரைசல் 5 சதம் ( 25 கிலோ / ஹெக்டர்) வேப்ப எண்ணெய் 3 சதம் ( 15 கிலோ / ஹெக்டர்) என்ற அளவில் தெளிக்கும் போது பழுப்பு தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.
- தாவர பொடிகளான வேப்பங்கொட்டைப் பொடி, நொச்சி , புரோஸோபிஸ் போன்றவற்றினை 5 சதம் என்ற அளவில் தெளிக்கும் போது கதிர் நாவாய்ப் பூச்சி மற்றும் கருநாவாய்ப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.
நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்