பஞ்சாபில் இயற்கை விவசாயம்

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம் மேகாலயா போன்றவை 100% இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றன.இதை பற்றி முன்பே படித்தோம்.

அனால், பசுமை புரட்சியின் சின்னமான பஞ்சாபிலேயே இந்த முயற்சிகள் வர ஆரம்பித்து உள்ளது மிகவும் வரவேற்க வேண்டிய நிகழ்வு !

பஞ்சாப் மாநிலம் 1960-70 ஆண்டுகளில் ஆரம்பித்த பசுமை புரட்சியை முழுவதும் பின்பற்றியது. ஒரு காலத்தில் கப்பல்களில் அமெரிக்காவில் இருந்து கோதுமை வந்தால்தான் நமக்கு உணவு என்று  இருந்த காலத்தை மாற்றி அமைத்ததில் பஞ்சாபின் விவசாயிகளுக்கு மிக பெரிய பங்கு உண்டு. இப்போதும் நம் நாட்டில் விளையும் அரிசி கோதுமை போன்றவற்றின் பெரிய பங்கு பஞ்சாபிற்கே

ஆனால் பசுமை புரட்சியின் பக்க விளைவுகள் கொஞ்ச கொஞ்சமாக பஞ்சாபில் 2000 வருடங்களில் வெளிப்பட ஆரம்பித்தது. நீர் மட்டம் குறைவு, நீர் நிலைகள் ரசாயன பூச்சி மருந்துகளால் மாசு பட்டது, விவசாயிகள் கடன் பட்டது, வேலை செய்த பீஹாரி வேலையாட்கள் வேலைக்கு வருவது குறைவு போன்ற பல பிரச்னைகள்.

எல்லாவற்றை விட ஐந்து நதிகள் பாயும் பஞ்சாபில் நீர் பிரச்சனை!

இப்போது பஞ்சாப் முதல் அமைச்சர் முதல் முறையாக இயற்கை விவசாயத்தை பற்றி பேச ஆரம்பித்து மட்டும் இல்லாமல் அதை சப்போர்ட் செய்யவும் வெளிப்படையாக கூறியுள்ளார். நல்லதோர் ஆரம்பம்!

இதை பற்றி மேலும் இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *