விதை நேர்த்தி செய்ய இலவச பஞ்சகவ்யா

“விதை நேர்த்தி செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் பஞ்சகவ்யா இலவசமாக வழங்கப்படும்’ என ஆதிரெங்கம் கிரியேட் இயற்கை விவசாய பண்ணை பயிற்சி இயக்குனர் ஜெயராமன் தெரிவித்தார்.

சாகுபடியில் முதல் நிலை விதை நேர்த்தி மிகமுக்கியம். விதை நேர்த்தி செய்வதன் மூலம் பழுது இல்லாமல் விதை முளைக்கும். நோய் தாக்குதலை விதையிலேயே தடுக்க முடியும். பயிர் செழிப்பாக வளர ஊட்டச்சத்தாகும். எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் பூஞ்சானை இயற்கை விவசாய முறையில் எளிமையாக செய்வதுதான் பஞ்கவ்யா நேர்த்தி.

இதற்காக விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் இலவசமாக பஞ்கவ்யா வழங்கப்பட உள்ளது.

விவசாயிகள் தங்கள் சாகுபடி விவரத்தை தெரிவித்து பஞ்சகவ்யாவை பெற 09443320954 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கிரியேட் ஜெயராமனிடம் பதிவு செய்து இலவச பஞ்சகவ்யா பெற்று கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *