- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உளுந்து பயிரைத் தாக்கும் மஞ்சள் நோயைத் தாங்கி வளரும் இயல்புடைய வம்பன் 1, வம்பன் 2, வம்பன் 3, வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 6, உளுந்து கோ 6 ஆகிய இரகங்களை ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
- விளைச்சலில் சாதனை படைத்த உளுந்து கோ 6 இரகத்தை விட அதிக விளைச்சலைத் தரும் மதுரை-1 இரகத்தை இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது.
- இந்த புதிய உளுந்து இரகம், எக்டருக்கு 700 கிலோ விளைச்சலைத் தரும்.
- மேலும் உளுந்தின் மாவு பொங்கும் தன்மையைக் கொண்டது.
- உளுந்து விதைத்த 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.
- மஞ்சள் தேமல் நோய், களப்புழு தாக்குதலைத் தாங்கி வளரும் இயல்புடையது.
- தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (நீலகிரி, கன்னியாகுமரி, தஞ்சாவூர் தவிர) பயிரிட ஏற்ற இந்த இரகம் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் சோதனை முறையில் பயிரிட்ட போது எக்டருக்கு அதிக விளைச்சலாக 1679 கிலோ கொடுத்துள்ளது.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்