சூரியகாந்தி, எள் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்த பயிற்சி நடக்க உள்ளது.இதுகுறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைபேராசிரியர் அகிலா கூறியதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இம்மாதம் 2016 ஜூலை 19ம் தேதி காலை 9 மணிக்கு ‘சூரியகாந்தி, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை’ என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது.

இப்பயிற்சியில் மண் மற்றும் பாசன நீர் ஆய்வின் முக்கியத்துவங்கள், மண் மற்றும் பாசன நீர் மாதிரி எடுக்கும் முறைகள், ஒருங்கிணைந்த முறையில் ஊட்டச்சத்து நிர்வாகம், உரமிடும் முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் ஆர்வமுள்ள அனைவரும் பங்கேற்கலாம்.விருப்பமுள்ளவர்கள் நாமக்கல்-மோகனூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரிலோ அல்லது    04286266650 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *