பந்தல் அமைத்து, காய்கறி வளர்த்தல் குறித்த இலவச பயிற்சி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2015 பெப்ரவரி 19ம் தேதி நடக்கிறது.திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், பண்ணையாளர் மற்றும் விவசாயிகள், மகளிர் குழுக்கள், பெண்கள் ஆகியோர், பந்தல் அமைத்து காய்கறிகளான பாகல், பீர்க்கங்காய், புடல் சாகுபடி குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 19ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது.
இதில், மண் பரிசோதனை அவசியம், கொடி வகை காய்கறி ரகம், பருவம், விதையளவு, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, உர மேலாண்மை, நுண்ணூட்ட மேலாண்மை, நீர்வழி உரமிடல், சொட்டு நீர் பாசனம், களை நிர்வாகம், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தடுப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்.
மேலும், விபரங்களுக்கு, 04286266 345, 04286266 244 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, வரும், 2015 பெப்ரவரி 18ம் தேதிக்குள் தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்