“நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2013 ஏப்ரல் 9ம் தேதி நிழல் வலையில் தாக்காளி, கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை சாகுபடி குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது’ என, அதன் ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 2013 ஏப்ரல் 9ம் தேதி நடக்கும் பயிற்சியில், நிழல் வலையில் கீரை, காய்கறி சாகுபடியின் முக்கியத்துவம், உர மேலாண்மை போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் விவசாயிகள் உட்பட விருப்பமுள்ளோர் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், 04286266244, 04286266345, 04286266650 ஆகிய தொலை பேசி எண்களில் தொடர்பு கொண்டோ அல்லது வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரடியாக வந்தும் பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்