குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு கூடுதல் மகசூல் பெற சொட்டு நீர்ப்பாசனம் முறையை பயன்படுத்த விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
- விவசாயிகள் சாகுபடி செய்யும் பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பழப்பயிர்களின் நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் செயல்திறன் மிக்க வேர்கள் மண்ணின் மேல்மட்டத்திலிருந்து ஒரு அடி ஆழத்தில் உள்ளது.
- நீர்பாசனம் செய்யும் போது மண் ணின் மேற்பரப்பு ஈரமாகவும், சத்துகள் உள்ளவாறும் பராமரித்தால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும்.
- சொட்டு நீர் பாசனத்தின் மூலம் தேவைப்படும் இடம் மற்றும் போதுமான அளவில் மண்ணின் மேற்பரப்பு ஈரமாக்கப்படுவதுடன் பயிருக்கு தேவைப்படும் சத்துகளை பயிர் களின் செயல்திறன் மிக்க வேர்கள் உள்ள இடத்திலேயே கிடைக்கிறது.
- இம்முறையினால் தண்ணீர் சிக்கனம், களை கட்டுப்பாடும் ஏற்பட்டு கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
- ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் தண்ணீரைக் கொண்டு சொட்டு நீர் பாசனம் மூலம் இரண்டரை ஏக்கர் வரை சாகுபடி செய்யலாம்.
- வாய்க் கால் மூலம் தண்ணீர் பாய்ச்சினால் 40 சதவீதம் வரை நீர் இழப்பினை தடுக்கலாம். சொட்டு நீர் பாசனம் செய்வதன் மூலம் பயிரின் வேர்களைச் சுற்றியும் 60 சதவீதம் ஈரப்பதமும், 40 சதவீதம் காற்றோட்டமும் நிலை நிறுத் தப்பட்டு பயிரின் வேருக்கு அருகில் உரம் மற்றும் நீர் கிடைப்பதால், பயிரின் வேர் மற்றும் தழை வளர்ச்சி கூடுதலாகி மகசூலும் அதிகளவில் கிடைக்கிறது.
- இதனால் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்கும் அளவும் குறைவாக உள்ளது.
- சொட்டுநீர் பாசனத்தின் மூலம் மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை வாழை, எலுமிச்சை, பப் பாளி, கத் தரி, வெண்டை, தக்காளி, மிள காய் மற்றும் பூசணி வகைகள் பயிர் செய்யலாம்.
- மேலும் இதற்கான உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளும் சொட்டு நீர் பாசனக் குழாய்கள் மூலமே செலுத்தப்படுவதால் செடிகளின் வேர்ப்பகுதியில் அவைகள் சென்று சேருகின்றன. இதனால் உரம் மற்றும் பூச்சி மருந்து செலவுகளும் குறைக் கப்படுகின்றன.
- மேலும் சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட் டக்கலை துறை மூலம் 65 சதவீதம் மான்ய விலையில் பாசனக் கருவிகள் பெறலாம்
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
How to get subsidy for trip irrigation?
Dear Sir,
We required the contact person of the Drip unit of Papaya. Please can you help us out in this.
Appreciate your help in this.
Thank you
Ashif.
எங்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா பகுதியில் வரட்சி காரணமாக சொட்டுநீர் பாசனம் தெளிப்புநீர் பாசனமே சிறந்தது ஆகவே உதவிபெற தக்கநபர்களை அணுக எங்களுக்கு உதவுங்கள் நன்றியை முன்கூட்டியே தெரிவிக்கிறோம்