பசுமை குடில்களில், குழிதட்டு முறையில் விளைவிக்கப்படும் நாற்றுக்களை பயன்படுத்தி, கத்தரி சாகுபடி செய்வதன் மூலம், சாதாரண மகசூலை விட மூன்று மடங்கு மகசூல் கிடைக்கும் என, கீழ்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
- தோட்டக்கலை துறை அதிகாரிகள் வழங்கிய, சொட்டு நீர் பாசன முறையில், கத்தரி பயிரிட்டேன். இதற்காக, 75 சதவீத மானியத்தில், சொட்டு நீர் பாசன கருவிகளை பெற்றேன்.
- எனது, 50 சென்ட் நிலத்தில், கத்தரி பயிரிட்டேன்.
- 40 நாட்களில், காய்க்க தொடங்கி, 6 மாதங்களுக்கு காய்த்தது.இதன் மூலம், 1.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.
- தொடர்ந்து, இல்லீடு தேசிய வேளாண் நிறுவனம், 100 சதவீத மானியத்தில், 1.50 லட்சம் ரூபாய் செலவில், பசுமை குடில் அமைத்து கொடுத்தது.
- அதில், குழித்தட்டு முறையில், கத்தரி, தக்காளி, மிளகாய் நாற்றுகளை விட்டு, அவற்றை நடவு செய்துள்ளேன்.
- பசுமை குடில்களில், குழித்தட்டு முறையில் வளரும் நாற்றுகளில் அதிக வேர் இருக்கும்.
- இதனால், செடி, செழிப்பாகவும், விரைந்தும் வளர்ந்து, சாதாரண முறையை காட்டிலும், மூன்று மடங்கு கூடுதல் விளைச்சல் கிடைக்கும்.
இவ்வாறு, பாஸ்கர் கூறினார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்