கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு முகாம்

“கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல் – மோகனூர் சாலையில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், பண்ணையாளர் மற்றும் விவசாயிகளுக்கு கலப்பின நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 2015 மார்ச் 19ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது. வரும், 18ம் தேதிக்குள், முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 04286 – 266 345, 266 244 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *