ஆடி, புரட்டாசி பட்டங்களுக்கு ஏற்ற கேழ்வரகு சாகுபடி

குறுதானியப் பயிர்களில் மிக முக்கியமானது ராகி எனப்படும் கேழ்வரகு; மாவு, புரதம், தாது, வைட்டமின், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.

பருவமழை அதிகமாகக் கிடைக்கக் கூடிய ஜூலை, ஆகஸ்ட் வரையிலான ஆடிப்பட்டம், செப்டம்பர், அக்டோபர் வரையிலான புரட்டாசிப் பட்டத்தில் கேழ்வரகு பயிரிடலாம்.

  • தமிழகத்தில் 94 ஆயிரம் ஹெக்டேரில் மானாவாரியாக கேழ்வரகு பயிரிடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 1.70 லட்சம் டன் கேழ்வரகு செய்யப்படுகிறது. ஹெக்டேருக்கு சராசரியாக 1,887 கிலோ தானிய விளைச்சல் கிடைக்கிறது.
  • கேழ்வரகுக்கு ஏற்ற மண்வகை: கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் தென்மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவுக்கு பயிரிடப்படுகிறது.
  • இறவைப் பயிராக சித்திரை, ஆடி, மார்கழிப் பட்டங்களிலும், மானாவாரியாக ஆடி, புரட்டாசிப் பட்டங்களில் கேழ்வரகு பயிரிடலாம். அனைத்து வகையான நிலமும் பயிரிட ஏற்றது.
  • செம்மண், இருமண் கலந்த நிலங்கள் கேழ்வரகு விளைச்சலுக்கு ஏற்றவையாக இருக்கின்றன.

ரகங்களும் சிறப்பியல்புகளும்:

  • வறட்சி மற்றும் நோயைத் தாங்கி வளரக்கூடிய பல ரகங்களை வேளாண் பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.
  • கோ 9 – ஹெக்டேருக்கு 4,500 கிலோ வரை சாகுபடி கிடைக்கக் கூடியது. தானியம் வெண்மை நிறத்தில் இருக்கும். மாவுத் தன்மை அதிகம் என்பதால் மதிப்பூட்டக் கூடிய பொருள்கள் தயாரிக்கலாம். இதில் அதிக புரதச்சத்து உள்ளது.
  • கோ 13 – ஹெக்டேருக்கு 3,500 கிலோ வரை கிடைக்கும். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. இது மானாவாரி, இறவைக்கு ஏற்றது.
  • கோ (ரா) 14 – ஹெக்டேருக்கு 2,800 கிலோ வரை சாகுபடி செய்ய முடியும். அதிக புரதம், சுண்ணாம்புச் சத்து உடைய ரகமான இது, குலைநோயைத் தாங்கி வளரக்கூடியது.
  • கே 7 – ஹெக்டேருக்கு 3,000 கிலோ விளைச்சல் கிடைக்கும். மானாவாரி, இறவைக்கு ஏற்ற ரகம்.
  • டி.ஆர்.ஒய் 1 – ஹெக்டேருக்கு 4 ஆயிரம் கிலோ வரை விளைச்சல் பெற முடியும்; களர், உவர் நிலத்துக்கு ஏற்றது.
  • பையூர் 1 – ஹெக்டேருக்கு 3,125 கிலோ விளைச்சல் கிடைக்கும்; வறட்சியைத் தாங்கக்கூடியது; நீண்ட விரல் ரகம்; மானாவாரி, இறவைக்கு ஏற்றது.
  • பையூர் (ரா) 2 – ஹெக்டேருக்கு 3,150 கிலோ விளைச்சல் கிடைக்கக் கூடியது. சாயாத தன்மை, குலைநோய்க்கு எதிர்ப்பு தன்மையைக் கொண்டது இது.

இவ்வாறுவேளாண் பல்கலையின் சிறுதானியத்துறையைச் சேர்ந்த அ.நிர்மலகுமாரி, பெ.வீரபத்திரன் ஆகியோர் கூறினர்.
நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *