கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

விழுப்புரம் பகுதியில் கேழ்வரகு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் மற்றும் ஏழைகளின் உணவாக மட்டுமே கேழ்வரகு இருந்தது.

கேழ்வரகு மூலம் அதிகமாக கூழ் காய்ச்சுவது, புட்டு அவிப்பது மற்றும் தோசை செய்வது கிராமங்களில் அதிகளவு காணப்படும்.

இதனால் கேழ்வரகு கிராமத்து மக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமே பெரும்பாலும் இருந்து வந்தது.காலப்போக்கில் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கேழ்வரகு கஞ்சி சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதனால் ஓட்டலில் சாப்பிட்டவர்கள் எல்லாம் தற்போது தெருவோரங்களில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும், கேழ்வரகு கூழ் சாப்பிடுவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

கோடை காலங்களில் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தவும் கேழ்வரகு கூழ் சிறந்த உணவாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

மக்களுக்கு கேழ்வரகு தேவை அதிகரித்து வருவதால் விலையும் உயர்ந்துள்ளது.

கேழ்வரகு சாகுபடிக்கு குறைந்தளவு தண்ணீர் மற்றும் பூச்சி தாக்கும் தன்மையும் குறைவு.

இதனால் விழுப்புரம் பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் கேழ்வரகு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *