கார்த்திகை, மார்கழி பட்ட சூரியகாந்தி சாகுபடி

கார்த்திகை பட்டத்தில் மானாவாரி பயிராக கோ.4, மார்டன் ஆகிய சூரியகாந்தி இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ். எச்.1, கே.பி.எஸ்.எச்.44, டி.சி.எஸ்.எச்.1 ஆகியவை சூரியகாந்தி இரகங்களும் ஏற்றவை.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

மார்கழி பட்டத்தில் இறவைப் பயிராக பயிரிட கோ.4, மார்டன் ஆகிய இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ்.எச்.1, கே.பி.எஸ்.எச்.44, எம்.எஸ்.எப். எச்.17 ஆகியவை ஏற்றவை.

  • விதையளவு : கிலோ / ஹெக்டேர்
  • இரகங்கள் – மானாவாரி 7, இறவை 6
  • வீரிய ஒட்டு இரகங்கள் – மானாவாரி 5, இறவை 4

விதை நேர்த்தி

  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டைசிம் அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி கொண்டு பூஞ்சாண விதை நேர்த்தி செய்யவும்.
  • விதைப்பதற்கு முன் ஒரு ஹெக்டேருக்கான விதைகளை 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 3 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா கொண்டு விதை நேர்த்தி செய்து 15 நிமிடங்கள் நிழலில் உலர வைத்து விதைக்கவும்.

விதைப்பு

  • ஒரு குழிக்கு இரண்டு விதை என்ற அளவில் 3 செ.மீ. ஆழத்தில் பாரின் பக்கவாட்டில் விதைக்கவும்.
  • பின்பு 10-ஆம் நாள் செழிப்பாக உள்ள ஒரு செடியை நிறுத்தி, மற்றதை களைத்து விடவும்.
  • பயிர் இடைவெளி: வீரிய ஒட்டு இரகங்கள் – 60 செ.மீ. x 30 செ.மீ., இரகங்கள் – 45 செ.மீ. x 30 செ.மீ.

களை நிர்வாகம்

  • ப்ளுக்குளோரலின் விதைத்த 5 ஆம் நாள் அல்லது பென்டிமெத்தலின் விதைத்த 3 ஆம் நாள் 2 லிட்டர் / ஹெக்டேருக்கு தெளித்தபின் நீர் பாய்ச்சுதல் வேண்டும்.
  • களைக்கொல்லி இட்டபின் 30-35 ஆம் நாளில் ஒரு கை களை எடுக்க வேண்டும். களைக்கொல்லி பயன்படுத்தாத நிலையில் விதைத்த 15 மற்றும் 30 ஆம் நாள் கை களை எடுக்க வேண்டும்.

உர நிர்வாகம்

  • ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம் அடியுழவில் இடவும்.
  • இரசாயன உரங்களில் வீரிய ஒட்டு இரகங்களுக்கு இறவையில் ஹெக்டேருக்கு 60:90:60 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்தும் மானாவாரியில் ஹெக்டேருக்கு 40:50:40 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்தும் இடவும்.
  • இரகங்களுக்கு இறவையில் ஹெக்டேருக்கு 60:30:30 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்தும், மானாவாரியில் ஹெக்டேருக்கு 40:50:40 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்தும் இடவும்.

உயிர் உரம் இடுதல்

  • ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்து விதைக்கு முன் இடவும்.

நுண்ணூட்ட உரம் இடுதல்

  • எக்டேருக்கு 12.5 கிலோ சூரியகாந்தி நுண்ணூட்ட உரக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் சாலில் இடவும்.

மணிகள் பிடிக்க பின்பற்ற வேண்டிய உத்திகள்

  • இடைக்கால பூக்கும் பருவத்தில் மகரந்த சேர்க்கைக்காக காலை 9.00 மணி முதல் 11.00 மணிக்குள் கையில் மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையும் தேய்க்க வேண்டும்.
  • எட்டிலிருந்து பத்து நாட்களுக்கு ஐந்து முறை இவ்வாறு செய்ய வேண்டும். அல்லது அருகருகே உள்ள பூக்கொண்டைகளை ஒன்றோடு ஒன்று முகம் சேர்த்து இலேசாக தேய்க்க வேண்டும்.
  • ஹெக்டேருக்கு 5 தேனிப்பெட்டி வைப்பதால் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு விதை பிடிப்பு அதிகரிக்கும். கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *