சூரியகாந்தியை இலை வண்டுகள், புழுக்கள், தத்துப்பூச்சிகள் மற்றும் பூக்கும் பருவத்தில் பச்சைப் புழுக்களில் இருந்தும் பாதுகாக்க வேண்டியுள்ளது.
கூடுமானவரை சூரியகாந்தியில் மகரந்த சேர்க்கைக்கு துணைபுரியும் தேனீக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாற, பூச்சி மருந்துகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.
முடிந்தவரை இப்பூச்சிகளை கையால் பொறுக்கி அழிக்கலாம். இனக்கவர்ச்சி பொறியை ஏக்கருக்கு ஐந்து வீதம் அமைத்து, அந்துப்பூச்சியை கண்காணிக்கவும், அழிக்கவும் முடியும்.
அவசியம் ஏற்பட்டால் ஏக்கருக்கு 10 கிலோ, என்டோசல்பான் (4 சதவீதம்) அல்லது பாசலோன் (4 சதவீதம்) தூளையோ, மாற்றாக என்டோசல்பான் 400 மி.லி., பாசலோன் 250 மி.லி., அல்லது பென்தியான் 100 மி.லி., மருந்தை மாலை வேளையில் தெளிக்கலாம்
இவ்வாறு நீர்மேலாண்மை துணைஇயக்குனர் எஸ்.ஐ.காதிரி தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்