இந்திய டுடே பத்திரிக்கை இந்தியா முழுவதும் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இந்தியாவிலேய மிகவும் வெறுக்கப்பட்ட அரசியல் வாதி (India’s most hated politicians) யார் என்று.
இந்த கருத்து கணிப்பில் முதலில் வந்து உள்ளவர், நம்முடைய விவசாய துறை மந்திரி சரத் பவர் தான். பழம் பெரும் ஊழல் பெருச்சாளியான அவர் மேல் எத்தனையோ குற்றச்சாட்டுகள்.
கிரிக்கெட், லாவசா மலை நகரம் அமைப்பு, மரபணு மாற்ற பட்ட விதை கம்பனிகளுடன் உறவு (மொன்சொண்டோ) என்று அவருக்கு எத்தனையோ ஜோலிகள்.
விவசாயிகள் இங்கே தற்கொலை செய்து கொள்ளும் போது அவர், பிரைவேட் ஜெட் விமானம் மூலம் தென் ஆப்ரிக்க பறக்கிறார் கிரிக்கெட் போட்டி பார்க்க. கடந்த ஏழு ஆண்டுகளில் அரசில் இந்த இலாகா மந்திரியாக இருந்து இந்திய விவசாயத்தை படி படியாக கீழ்நோக்கி சுழல் செல்வதை பார்த்து ஒன்றும் செயாமல் இருப்பவர் அவர்
இந்த கருத்து கணிப்பை பார்த்தவாது நம் பிரதமர் எந்த ஊழல் பெருச்சாளியை மாற்றுவாரா? மாட்டார். அவர் தான் அ ராசவிற்கே நல்ல சான்றிதிதழ் கொடுத்தார் ஆயிற்றே!
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்