தென்னையில் கருந்தலை புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

தென்னையில் கருந்தலை புழுக்களால் பாதிப்பு ஏற்படுகிறது. கருந்தலை புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து பார்ப்போம்.
அறிகுறிகள்:

இந்த வகை புழு, பச்சை கலந்த பழுப்பு நிற உடல்களைக் கொண்டிருக்கும். தலை கருப்பாகவும், உடல் மீது பழுப்பு நிறக் கோடுகளும் இருக்கும். தென்னை இலைத் திசுக்களில் உள்ள பச்சையத்தைச் சாப்பிடுவதால்,  தென்னை மரம் காய்ந்ததுபோல் தோற்றமளிக்கும்.
தடுப்பு முறைகள்:

  • கருந்தலைப் புழு தாக்குதலுக்கு உள்ளான ஓலைகள்,  மட்டைகளை அப்புறப்படுத்தி தீயிட்டு எரிக்க வேண்டும்.
  • ஒட்டுண்ணிகளான பேராசியரோலா 3,000 எண்கள் அல்லது பிரகான் பிரேவிகார்னிஸ் 4,500 எண்களில் ஹெக்டேர் பரப்பளவில் மரத்தின் குருத்துப் பகுதியில் இரண்டு முறை தாக்குதலின் அறிகுறிகள் குறையும் வரை இட்டுக் கட்டுப்படுத்தலாம்.
    ஒட்டுண்ணியானது தென்னை ஆராய்ச்சி நிலையம்-ஆளியாறில் கிடைக்கிறது.
  • வளரும் மரங்களில் கருந்தலைப் புழுக்களைக் கட்டுப்படுத்த டைகுளோரோவாஸ் 2 மில்லியை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து தாக்குதல் அதிகம் உள்ள மர ஓலைகளின் கீழ் பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும்.
  • காய்ப்புக்கு வந்த மரங்களில் தாக்குதலைக் கட்டுப்படுத்த மரத்தின் அடிபாகத்திலிருந்து 1.5 மீட்டர் உயரத்தில் மரத்தின் தண்டு பாகத்தில் சாய்வாகத் துளையிட்டு துளையில் மோனோகுரோடோபாஸ்-36 டபிள்யூ எஸ் சி-5 மில்லி மருந்தை ஊற்றியபின் தாமிரக் கரைசல் கலந்து களிமண்ணால் மூடிவிட வேண்டும்.
  • வேர் மூலம் கட்டுப்படுத்துவதாக இருந்தால், நன்கு வளர்ந்த வேரை சாய்வாக வெட்டிய பின் இதை பாலிதீன் பையில் மோனோகுரோடோபாஸ் 36, டபிள்யூ எஸ் சி-10  மில்லி, 10 மில்லி தண்ணீர் கலந்த கலவையில் வேரை இட்டு இறுக்கமாகக் கட்ட வேண்டும்.
    மருத்து இட்ட 40 நாள்கள் வரை காய்கள் அறுவடை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • மேலும், மருந்து இட்ட தோட்டத்தில் ஒட்டுண்ணிகளை விடக் கூடாது. இத்தகைய முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தென்னையில் கருந்தலைப் புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *