ஒரு காலத்தில் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிப்பது ஒரு பிரச்னையே இல்லை.இப்போது, யாரை கேட்டாலும், மரத்தில் தேங்காய் பறிக்க ஆளே என்பது தான்.
விவசாயத்தில், ஆள் பற்றாக்குறை என்பது சில காலமாக ஒரு கசப்பான உண்மையாக ஆகி விட்டது.
இந்த பிரச்னையை தீர்க்க திண்டுகல்லில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்திரா இப்போது தென்னை மரத்தில் ஏறுவதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள்.
இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:
– திண்டுக்கல் உட்பட 9 மாவட்டங்களில் செயல் படுத்த படும்
– 20 பேர் ஒரு சமயத்தில் பயிற்சி கொடுக்க படும்
– ஒரு நாளைக்கு ரூ 150 சம்பளம் கொடுக்க படும்
– இயந்திரம் மூலம் தேங்காய் பறிக்க சொல்லி கொடுக்க படும்
– இந்த பயிற்சியை சரியாக முடிப்போற்கு 2300 மதிப்பு உள்ள தென்னை ஏறும் இயந்திரம் கொடுக்க படும்
– தென்னையில் வரும பூச்சிகளை தடுக்கும் முறைகளும் சொல்லி தர படும்
இந்த திட்டத்தில் மூலம் கேரளத்தில் பயிற்சி பெற்றவர்கள் தினமும் 1000 வரை சம்பாதிபதாகவும் பெண்களும் இந்த திட்டத்தில் சேர்வதாகவும் திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் கூறினார்!
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்