தேங்காய் விலை சரிவை தடுக்க தென்னை விவசாயிகளுக்கு, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் மாற்று யோசனை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் காய்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மட்டுமின்றி டில்லி, மும்பை போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கர்நாடகா, கேரளா பகுதிகளில் இருந்து தேங்காய் வரத்து அதிகரிக்கும்போது விலை குறைகிறது. இதனால் தென்னை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்க உலர் தேங்காய் துருவலாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விவசாயிகளுக்கு ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் யோசனை தெரிவித்துள்ளது.அதன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சீகன்பால் கூறியதாவது:
- உலர் தேங்காய் துருவலை தயாரிக்க நன்கு முற்றிய தேங்காயை துருவி எடுக்க வேண்டும்.
- அதனை நீராவியில் 2 நிமிடம் வேக வைக்கவும்.
- அவற்றை உப்பு, சிட்ரிக் அமிலம் சேர்த்து தயாரித்த உப்புக்கரைசலில் 2:1 விகிதத்தில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பின் உப்புக் கரைசலை வடிகட்டிவிட்டு, துருவலை மின் உலர்ப்பானில் 60 சென்டிகிரேடு வெப்பத்தில், 5 மணி நேரம் உலர வைத்தால் போதும்.
- இந்தமுறையில் தயாரிக்கப்படும் உலர் துருவலை குழம்பு, பொரியல் உள்ளிட்ட சமையலுக்கு பயன்படுத்தலாம் என்றார்.
- உப்பு கரைசலுக்கு பதிலாக 10 சதவீதம் சர்க்கரை கரைசலில் துாவலை ஊற வைக்க வேண்டும். இந்தமுறையில் தயாரிக்கப்படும் துருவலை இனிப்பு பலகாரங்களில் பயன்படுத்தலாம்.
- இதனை வெளிநாட்டினர் உணவிற்கு பயன்படுத்துகின்றனர். ஸ்டார் ஓட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நல்ல விலை கிடைக்கிறது. இதனை எளிதில் தயாரிக்கலாம். செலவும் குறைவு, என்றார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்