லாபம் தரும் தென்னை காயர் பித்!

தென்னை நார் கழிவில், ‘காயர் பித்’ தயாரிக்கும் தொழில் செய்து வரும், கோவை மாவட்டம், வங்கப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, ஜெகதீசன் கூறுகிறார் :

  • நாங்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகிறோம். தமிழகத்தில் முதல்முதலாக விவசாய சங்கத்தை துவக்கியவரும், இலவச மின்சாரத்துக்காக போராடியவருமான, நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாய சங்கத்தில், சுல்தான்பேட்டை வட்டாரத் தலைவராக, என் அப்பா கோவிந்தசாமி இருந்தார்.
  • எங்கள் குடும்பத்துக்கு, 35 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. கல்லுாரி படிப்பை முடித்த நான், விவசாயத்துக்கு வந்துவிட்டேன். தம்பிகள் இருவரும், வெளியூரில் வேலை பார்க்கின்றனர்.
  • தேங்காய் உரித்த பின் கிடைக்கும் மட்டைகளை, இயந்திரத்தில் அரைத்தால், மஞ்சி கிடைக்கும். அதைத் திரித்து தான் கயிறு உற்பத்தி செய்வர்.
  • மட்டைகளை அரைக்கும்போது, கழிவுத் துகள்களும் வெளியாகும். மாடித் தோட்டம், நர்சரி, மண்ணில்லா விவசாயத்திற்கு, தென்னை நார்க்கழிவு பயன்படுகிறது.
  • இஸ்ரேல், நெதர்லாந்து, அரபு நாடுகளுக்கு, நிறைய ஏற்றுமதி வாய்ப்பும் ஆகிறது.நார்க்கழிவை லாரியில் ஏற்றி அனுப்பும்போது, இடத்தை அடைத்துக் கொள்வதுடன், காற்றிலும் பறந்ததால், அதை நார்க்கட்டியாக மாற்றும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர்.
  • அதற்கான இயந்திரங்களை வாங்கி, கட்டியாக்கி விற்பனை செய்து வருகிறேன். இப்போது, ‘காயர் பித்’ தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகி வருவதுடன், விற்பனை வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
  • இதை அமைக்க, வங்கிக் கடனும் கிடைக்கிறது.மாதத்தில், 20 நாட்களுக்குத் தான் வேலை இருக்கும்.
  • நன்றாக வெயில் அடிக்கும் ஆறு மாதம் தான், தென்னை நார்க்கட்டியை தயாரிக்க முடியும். தற்போது தினமும், 10 டன் அளவுக்கு, காயர் பித், அதாவது, 2,000 கட்டிகள் உற்பத்தி செய்கிறேன்
  • . ஒரு காயர் பித், 70 ரூபாய்க்கு விற்கிறேன். ஏஜன்ட் கமிஷன், போக்குவரத்து, வங்கித் தவணை, கரன்ட் செலவு போக, தினமும், 8,000 ரூபாய் லாபமாக நிற்கிறது.
  • வெயில் காலத்தில் உற்பத்தி அதிகமாக இருக்கும். மழைக் காலத்தில் காய வைக்க முடியாது என்பதால், உற்பத்தி இருக்காது. இப்போது, மழைக் காலங்களிலும் உலர் கலன் பயன்படுத்தி காய வைக்கும் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யலாம் என, முடிவு செய்து உள்ளேன்.
  • முன்னர், தென்னை விவசாயம் மட்டும் செய்து வந்த நான், இப்போது இதையும் கூடுதல் தொழிலாக செய்வதால், வருமானம் அதிகரித்துள்ளது. அடுத்து, மண்புழு உரம், பஞ்ச கவ்யா, உயிர் உரங்கள் கலந்து, செறிவூட்டப்பட்ட காயர் பித் தயாரிக்கும் யோசனை உள்ளது.

தொடர்புக்கு: 09865555267 .

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *